கள் ஒரு பொருளாதார பிரச்சனை-குருமூர்த்தி
பொள்ளாச்சி:
தென்னை, பனை மரங்களில் இருந்து இறக்கப்படும் கள் பிரச்சனையைவிவலசாயிகளின் பிரச்சனையாகப் பார்க்காமல் பொருளாதார பிரச்சனையாகப் பார்க்கவேண்டும் என ஆர்எஸ்எஸ்சின் சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் அகில இந்தியஇணை அமைப்பாளர் குருமூர்த்தி கூறியுள்ளார்.
பொள்ளாச்சியில் கிராமப் பொருளாதாரம் மேம்பட கள் என்ற கருத்தரங்குநடைபெற்றது. இதில் குருமூர்த்தி பேசியதாவது,குடும்பத்தை நாசமாக்கக் கூடியது கள் என்ற வண்ணம் அனைத்துச் தரப்பினரிடமும்உள்ளது. இது குறித்து பேசக் கூட பயப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இன்றையசூழ்நிலையில் கள் என்பதை விவசாயிகளின் பிரச்சனையாகப் பார்க்காமல்பொருளதாரப் பிரச்சனையாகப் பார்க்க வேண்டும்.
கடந்த 1971ம் ஆண்டு வரை எந்த மதுபானமும் அருந்தாத தலைமுறை இருந்தது.ஆனால் இப்போது அந்திய நாட்டு மதுபானக் கடைகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால்கள் மட்டும் குடிக்கக் கூடாது என்பதை ஏற்க முடியவில்லை.
கிராமத்தைப் பற்றிய செய்திகள் வெளியில் தெரிவதில்லை. கிராமப்புறங்களில் பஞ்சம்ஏற்படும்போது தான் விவசாயிகள் பிரச்சனை தெரிகிறது. கள் பிரச்சனையைபொருளாதாரப் பிரச்சனையாக மாற்ற வேண்டும், இதில் பத்திரிக்கைகளுக்குப் பெரியபங்குண்டு.
சமுதாயப் பொறுப்பில் உள்ளவர்களைச் சந்தித்து இப்பிரச்சனையை எடுத்துக் கூறிஅரசுப் பொறுப்பில் உள்ளவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என அவர்கூறினார்.












Click it and Unblock the Notifications