For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டசபையில் ஜெ: மாடத்தில் சசிகலா!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

எதிர்கட்சித் தலைவர் ஜெயலலிதா இன்று சட்டசபைக்கு வந்து கூட்டத்தில் கலந்துகொண்டார். அவர் பேசுவதை பார்ப்பதற்காக தோழி சசிகலா, அதிமுக பொருளாளர்டி.டி.வி. தினகரன் ஆகியோர் சபைக்கு வந்திருந்தனர்.

பட்ஜெட்டை புறக்கணித்த ஜெயலலிதா, அவையையும் சில நாட்களாகப்புறக்கணித்தார். இந் நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஜெயலலிதா சட்டசபைக்குவந்தார்.

அவரை நுழைவாயிலில் நின்றும், தடால் தடால் என காலில் விழுந்து எழுந்து நின்றும்ஓ.பன்னீர்செலவம், செங்கோட்டையன், ஜெயக்குமார், சேகர்பாபு, வளர்மதி,கலைராஜன் ஆகியோர் வரவேற்று சட்டசபை வளாகத்திறகுள் அழைத்துச் சென்றனர்.

பின்னர் உறுப்பினர் பதிவேட்டில் கையெழுத்திட்ட ஜெயலலிதா, சபைக்குள் சென்றுதனது இருக்கையில் அமர்ந்தார். அவர் உள்ளே நுழைந்தபோது அதிமுகஉறுப்பினர்கள் எழுந்து நின்று பணிவாக வணங்கினர்.

ஜெயலலிதா சபையில் கலந்து கொள்வதைப் பார்த்து ரசிப்பதற்காக உடன் பிறவாசகோதரி சசிகலாவும், அவரது அக்காள் மகனும் அதிமுகவின் புதியபொருளாளருமான தினகரனும் பார்வையாளர்களாக வந்து மாடத்தில்அமர்ந்திருந்தனர்.

முன்னதாக ஜெயலலிதா சட்டசபைக்கு வந்தபோது அவரை அருகில் சென்றுபுகைப்படம் எடுக்க பத்திரிக்கை புகைப்படக்காரர்கள் முயன்றனர்.

ஆனால் அதற்கு அனுமதி கிடைக்காததால், மேடம் கொஞ்சம் நில்லுங்கள் என்றுபுகைப்படக்காரர்கள் குரல் கொடுக்கவே, அதை ஏற்ற ஜெயலலிதா சில நொடிகள்நின்று புன்னகைத்தபடி போஸ் கொடுத்து விட்டு பின்னர் உள்ளே சென்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X