கள்ளக் காதல்-கணவரை கொன்றார் மனைவி?
சென்னை:
கள்ளக் காதல் காரணமா, வாழைப் பழத்தில் விஷம் கணவரைக் கொலை செய்ததாகக் கருதப்படும் மனைவிகைது செய்யப்பட்டுள்ளார்.
போரூரைச் சேர்ந்தவர் தயாளன் (31). தச்சுத் தொழிலாளியான இவருக்கும் வேலூர் அருகே அணைக்கட்டைச்சேர்ந்த பூர்ணிமாவுக்கும் (23) கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது.இந் நிலையில் கடந்த 8ம் தேதி தயாளனை திடீரென மயக்கமான நிலையில் தனியார் மருத்துவமனையில்அனுமதித்தார் பூர்ணிமா.
இதையடுத்து தயாளனின் சகோதரர் ரமேஷ், போலீசாரிடம் ஒரு புகார் தந்தார். அதில், எனது அண்ணிபூர்ணிமாவுக்கும் வேலூரைச் சேர்ந்த ஒருவருக்கும் கள்ளக் காதல் இருந்து வருகிறது. இதனால் தான் என்அண்ணனுக்கு வாழைப் பழத்தில் பூர்ணிமா விஷம் வைத்து கொடுத்துள்ளார் என்று கூறப்பட்டிருந்தது.
இது குறித்து பூர்ணிமாவிடம் போலீசார் விசாரித்தபோது அதை அவர் மறுத்தார்.
இந் நிலையில் சுய நினைவு திரும்பாமலேயே தயாளன் இறந்துவிட்டார். இதையடுத்து தயாளனின் உறவினர்கள்வளசரவாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பூர்ணிமாவை கைது செய்ய வேண்டும் என்று போராட்டம்நடத்தினர்.
இதைத் தொடர்ந்து பூர்ணிமா கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.