நாளை ஆடிப்பெருக்கு: காவிரிக் கரையில் ஏற்பாடுகள் தயார்!
திருச்சி:
காவிரி ஆற்றில் கடந்த சில ஆண்டுகளாக நிலவி வந்த பஞ்சத்தைப் போக்கும்வகையில் இந்த ஆண்டு அதிக அளவில் தண்ணீர் இருப்பதால் நாளை ஆடிப் பெருக்குவிழாவைக் கொண்டாட மக்கள் ஆர்வத்துடன் காத்துள்ளனர்.
இதற்கான ஏறபாடுகளும் சிறப்பாக செய்யபபட்டுள்ளன. தமிழகத்தில் காவிரிக்கரைகளில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு (ஆடி 18ம் நாள்) வெகு சிறப்பாககொண்டாடப்படுவது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ஆடிப் பெருக்குவழக்கமான உற்சாகம் இன்றி கொண்டாடப்பட்டு வந்தது.இதற்கு முக்கிய காரணம், காவிரியில் தண்ணீர் இல்லாதது தான். ஆனால் இந்த ஆண்டுகாவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்துக் கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் மனமும்சந்தோஷத்தில் நிரம்பி வழிகிறது.
இதையடுத்து நாளை ஆடிப்பெருக்கு விழாவை சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராகஉள்ளனர்.
ஆடிப் பெருக்கு திருச்சியில்தான் வெகு விசேஷமாகக் கொண்டாடப்படும். புதுமணத்தம்பதிகள் கணவன், மனைவி சகிதமாக காவிரிக் கரைக்கு வந்து காவிரித் தாயைவழிபட்டு, புதுத் தாலி அணிந்து கொள்வார்கள்.
கல்யாண வயதில் இருக்கும் பெண்கள், நல்ல கணவன் அமைய வேண்டும் என்றுவேண்டிக் கொள்வார்கள்.
ஆடிப் பெருக்குக்கான ஏற்பாடுகள் குறித்த் திருச்சி துணை ஆணையர் ராஜசேகரன்கூறுகையில், 200க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாபப்ப் பணியில்ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்கள தவிர ஊர்க்காவல் படையினர், என்.எஸ்.எஸ்.மாணவர்கள் ஆகியோரும முக்கிய இடங்களில் குவிக்கப்படவுள்ளனர்.
சமூக விரோதிகளை கண்காணிக்க ரகசிய கேமராக்களும் பொருத்தபபட்டுள்ளன.மருத்துவக் குழுக்களும் தயார் நிலையில் வைக்கப்படவுள்ளன.
காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள பாலங்களிலிருந்து ஆற்றில் குதிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவர்களைக் கண்காணிக் பாலங்களிலும் கண்காணிப்புதீவிரப்படுத்தப்படும் என்றார் ராஜசேகரன்.












Click it and Unblock the Notifications