இலங்கை போலீஸாருக்கு தமிழகத்தில் பயிற்சி: சட்டசபையில் மதிமுக எதிர்ப்பு-ராமதாஸ் கண்டனம்
சென்னை:
கோவையில் உள்ள மத்திய ரிசர்வ் படை பயிற்சி மையத்தில், இலங்கையை சேர்ந்த 54 போலீஸாருக்கு பயிற்சிஅளிக்கப்பட்டு வருகிறது. இதற்கு சட்டசபையில் மதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
சட்டசபையில் இன்று மதிமுக உறுப்பினர் கணணப்பன் பேசுகையில், இலங்கையில் தமிழர்கள் கொன்றுகுவிக்கப்பட்டு வருகிறார்கள். இந் நிலையில், கோவையில் உள்ள மத்திய அரசின் ரிசர்வ் படையின் பயிற்சிமையத்தில், இலங்கை ஆயுதப் படை போலீஸார் 54 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது அதிர்ச்சிஅளிப்பதாக உள்ளது.இதைத் தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழர்கள் மனதில்வேதனையே மிஞ்சும் என்றார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் கருணாநிதி, பயிற்சிக்கு வாருங்கள் என்று தமிழக அரசு அவர்களை அழைக்கவும்இல்லை, இங்கு பயிற்சி எடுக்க அனுமதி அளிக்கவும் இல்லை. இதற்கான அனுமதியைத் தந்தது மத்திய அரசுதான். இங்கு தெரிவிக்கப்பட்ட உறுப்பினரின் உணர்வுகளை மத்திய அரசு கவனத்தில் கொள்ளும் என்றுஎதிர்பார்க்கிறேன் என்றார்.
ராமதாஸ் கடும் கண்டனம்:
இதேபோல பாமக நிறுவனர் ராமதாஸும், இலங்கை போலீஸாருக்கு கோவையில் பயிற்சி கொடுப்பதைகடுமையாக எதிர்த்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
அமைதிப் பேச்சுவார்த்தையை இலங்கை அரசு திட்டமிட்டு குலைத்துப்போட்டு விட்டது. தமிழர் பகுதிகள் மீதுபோர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி தமிழர்களை கொன்று குவித்து வருகிறது.
இந் நிலையில் இலங்கை ஆயுதப் படையைச் சேர்ந்த போலீஸார் கோவை வந்துள்ளதாகவும், அங்கு அவர்களுக்குபயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
தமிழர்கள் அனைவருக்கும் இது அதிர்ச்சியான செய்தி என்பதில் சந்தேகம் இல்லை. ஈழத் தமிழ்களை நசுக்கிவரும் சிங்கள அரசுக்கு எந்த உருவத்திலும் உதவக் கூடாது என்பது இங்குள்ள தமிழர்கள் மட்டுமல்ல உலகில்உள்ள அத்தனை தமிழர்களின எண்ணமும் ஆகும்.
எனவே பயிற்சிக்காக கோவை வந்திருக்கும் இலங்கை போலீஸாரை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும்.மத்திய பாதுகாப்பு அமைச்சரோடு தொடர்பு கொண்டு இந்தக் கோரிக்கையை பாமக எம்.பிக்கள நேரில்வலியுறுததுவார்கள் எனறு கூறியுள்ளார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications