கணவருடன் குஜால்- பெண் சப்-இன்ஸ்பெக்டரை பின்னியெடுத்த மனைவி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தனது இன்ஸ்பெக்டர் கணவருடன் கும்மாளம் போட்ட பெண் சப்-இன்ஸ்பெக்டரை,அவரது மனைவி அதிகாலையில் துரத்தி துரத்தி அடித்து வெளுத்ததால் மதுரை ரிசர்வ்லைன் போலீஸ் குடியிருப்பில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர் மாரிமுத்து.இவர் ஒரு மகா பிராடு. வழக்கறிஞர் சங்கர நாராயணன் என்பர் கொடுத்த புகாரைத்திருத்தியதாக எழுந்த புகாரின் பேரில் மாரிமுத்து தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டார்.

மாரிமுத்துவின் கீழ் பணியாற்றிய பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீனாம்பிகைக்கும்இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்தது.

காவல் நிலையத்தில் வைத்தே இருவரும் உல்லாச கூத்தடிக்கவே, இருவரையும்வெவ்வேறு ஊர்களுக்கு இடமாற்றம் செய்தனர் அதிகாரிகள்.

ஆனால் மேலதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து மீண்டும்அண்ணாநகருக்கே வந்தார் மாரிமுத்து. மீனாம்பிகையுைம் அதே இடத்திற்குவரவழைத்து விட்டார்.

இந்த நிலையில்தான் வக்கீல் வழக்கில் சிக்கி சஸ்பெண்ட்ஆனார் மாரிமுத்து.

மதுரை ரிசர்வ் லைன் போலீஸ் குடியிருப்பில் மாரித்து தனது 2வது மனைவி (முதல்மனைவி ஏற்கனவே இறந்து விட்டார்) மகாலட்சுமி, மகன் கார்த்திகேயன்ஆகியோருடன் வசித்து வருகிறார்.

தற்போது தல்லாகுளம் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும்மீனாம்பிகையும் இதே குடியிருப்பில்தான் வசித்து வருகிறார். மாரிமுத்துவும்,மீனாம்பிகையும் தங்களது உறவை இங்கும் தொடர்ந்து வந்தனர்.

இந் நிலையில், திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் வெளியில் போய் விட்டுவருவதாக மனைவியிடம் கூறி விட்டு வெளியே கிளம்பியுள்ளார் மாரித்து. ஆனால்அதிகாலை வரை அவர் வீடடுக்கு வரவில்லை.

இதனால் கவலை அடைந்த மகாலட்சுமி தனது வீட்டு வாசலிலேயே காத்துக்கிடந்துள்ளார். இந் நிலையில் அதிகாலை 2 மணியளவில மீனாம்பிகைவீட்டுக்குள்ளிருந்து மாரிமுத்து, வெளியே வந்துள்ளார்.

கூடவே மீனாம்பிகையும் வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்துள்ளார். இதைப்பார்த்த மகாலட்சுமி கொந்தளித்து விட்டார்.

கோபத்தோடு மீனாம்பிகை மீது பாய்ந்த அவர் படு ஆவேசமாக அவரை சரமாரியாகஅடிக்க ஆரம்பித்தார். வலி தாங்க முடியாமல் மீனாம்பிகை ஓட ஆரம்பித்தார்.ஆனாலும் ஆவேசம் தணியாத மகாலட்சுமி, மீனாம்பிகையை துரத்தி துரத்தி அடித்தார்.

அதிர்ந்து போன மாரிமுத்து, தனது மனைவியை தடுத்து கண்மூடித்தனமாக அடிக்கஆரம்பித்தார். இந்த சப்தம் கேட்டு போலீஸ் குடியிருப்பே விழித்துக் கொண்டது.அத்தனை பேரும் வெளியில் வந்து வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் என்பவர் கட்டுப்பாட்டு அறைக்கு போன்செய்தார். ரோந்துப் பணியில் இருந்த உதவி ஆணையர் சக்திவேலுக்கு தகவல் பறந்துஅவர் குடியிருப்புக்கு விரைந்து வந்தார்.

பின்னர் மகாலட்சுமியை தல்லாகுளம் காவல் நிலையத்திற்கு வருமாறு உத்தரவிட்டார்.அதன்படி மகாலட்சுமியும், தனது அணணன் முருகேசன் மற்றும் உறவினர்களுடன்காவல் நிலையத்துக்கு சென்று மாரிமுத்து, மீனாம்பிகையின் லீலைகளைக் கூறி கதறிஅழுதார்.

சமீபத்தில் வீடு வாங்க வேண்டும் என்று மாரிமுத்து கேட்டதால் ரூ. 5 லட்சம் பணம்தந்தோம். அதை அவர் என்ன செய்தாரோ என்று மகாலட்சுமியின் குடும்பத்தினரும்புகார் கூறினர்.

இனிமேல் இவருடன் வாழ மாட்டேன் என்று கூறிவிட்டு தனது மகன்கார்த்திகேயனுடன் சொந்த ஊரான நெல்லைக்குப் புறப்பட்டுச் சென்றார் மகாலட்சுமி.

அடி வாங்கிய மீனாம்பிகை மருத்துவ விடுப்பு போட்டு விட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.அவரை சஸ்பெண்ட் செய்து துணை ஆணையர் அறிவுச்செல்வன் உத்தரவிடடுளளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+