ஆடிப் பெருக்கு-காவிரிக் கரைகளில் கோலாகலம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
ஆடி 18 என்று அழைக்கப்படும் ஆடிப் பெருக்கு இன்று தமிழகத்தில் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விழாவான இந்த கொண்டாட்டம், இம்முறை காவிரியில் வெள்ளம்வழிந்தோடுவதால் மிக மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது.இதையொட்டி ஆயிரக்கணக்கான மக்கள் இன்று திருச்சி உள்ளிட்ட காவிரிக் கரைப் பகுதிகளின் குவிந்தன்.புதுமணத் தம்பதிகள் புதுத்தாலி மாற்றிக் கொண்டு, சுமங்கலி பூஜையும் நடத்தினர்.
ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் காலை முதல் ஏராளமான புதுமணத் தம்பதிகள் காவிரியில் புனிதநீராடினர். இதனால் இந்தப் பகுதியில் மக்கள் வெள்ளமாகக் காணப்படுகிறது.
அதே போல தஞ்சை அருகே திருவையாற்றில் காவிரி ஆற்றின் கரையில் உள்ள அய்யாறப்பர் கோவில் புஷ்படமண்டப படித்துறையிலும் தஞ்சை பெரிய கோவில் புது ஆறு படித்துறையிலும் ஏராளமான மக்கள் சுமங்கலிபூஜை நடத்தினர்.
பெரும்பாலான தமிழக கோவில்களிலும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. தம்பதிகள்கோவிலில் மாலை மாற்றிக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications