பெப்சி, கோக்கில் 24 மடங்கு பூச்சி மருந்து!!
டெல்லி:
பெப்சி, கோலா உள்ளிட்ட குளிர் பானங்களில் இந்திய தர நிர்ணய கழகத்தினால் அனுமதிக்கப்பட்ட அளவைவிட சராசரியாக 24 மடங்கு பூச்சி மருந்து கலந்து இருப்பதாக ஒரு சமூக நல அமைப்பு நடத்திய ஆய்வில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக நல அமைப்பான விஞ்ஞானம், சுற்றுப்புற சூழல் கழகம் நடத்திய ஆய்வில், 11 வகை குளிர் பானங்களில்அதிகமான அளவுக்கு பூச்சி மருந்து கலந்து இருப்பது தெரியவந்துள்ளது.இந்தக் கழகத்தின் இயக்குனர் சுனிதா நரேன் தலைமையிலான டீம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தியசோதனையில் பூச்சி மருந்து உள்பட 4 நச்சுப் பொருட்கள் மட்டுமே கலந்து இருந்தது. தற்போது இந்தஎண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரியில் 52 மடங்கு கூடுதல்பூச்சி மருந்து உள்ளது தெரியவந்துள்ளது.
குளிர்பான நிறுவனங்கள் மறுப்பு:
ஆனால், பெப்சி, கோககோலா குளிர் பான நிறுவனங்கள் இந்த தகவலை மறுத்துள்ளது. இந்தியாவில்தயாரிக்கப்படும் குளிர் பானங்கள் அனைத்தும் சர்வேதச விதிமுறைகளுக்கும், தேசிய அளவிலான அனைத்துவிதமான நெறி முறைகளுக்கும் உட்பட்டே தயாரிக்கப்படுகிறது.
நுகர்வேரின் பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம் என்று இந்த நிறுவனங்கள் கூறியுள்ளன.












Click it and Unblock the Notifications