சிறுதாவூர் நிலம் தலித்களுடையதே: மார்க். கம்யூ
சென்னை:
தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்குகிறது. இதைத் தடுக்க தமிழக அரசு உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் வரதராஜன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், தமிழகத்தில் இங்கொன்றும் அங்கொன்றுமாக தீவிரவாதம் தலைதூக்கி வருகிறது. தீவிரவாதத்தைத் தடுக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.சிறுதாவூரில் உள்ள 53 ஏக்கர் நிலம் தலித் மக்களுக்கு சொந்தமானதுதான். அதைசசிகலா ஆக்கிரமித்துள்ளார். இது குறித்து விசாரணை கமிஷனிடம் விளக்கமாகஎடுத்துச் சொல்வோம்.
இதேபோல பல மாவட்டங்களில் நில மோசடி நடந்துள்ளது. இதையும் மீட்க அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் நில உச்சவரம்பு சட்டத்தை முறையாக அமல்படுத்தினால், பல்வேறு நிலமுதலைகளிடம் சிக்கியுள்ள அதிகப்படியான நிலத்தை மீட்கலாம். இதன்மூலம்அரசுக்கு 20 லட்சம் ஏக்கர் நிலம் கிடைக்கும்.
ஏழைகளுக்கு 2 ஏக்கர் தரிசு நிலத்தைக் கொடுக்கவ லியுறுத்துகிறார்களா அல்லதுகொடுக்கக் கூடாது என்கிறார்களா என்பதை ஜெயலலிதாவும், திருமாவளவனும்விளக்க வேண்டும்.
திமுக அரசை மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதா சொல்வதில் நியாயமு இல்லை.எல்லாக் கட்சிகளாலும் சேர்ந்து உருவாக்கப்பட்டதுதான் திமுக அரசு.
இலங்கை போலீஸ் அதிகாரிகளுக்கு கோவையில் ராணுவப் பயிற்சி அளிக்கத்தேவையில்லை. இதை மத்திய அரசு தவிர்த்திருக்க வேண்டும்.
தேசிய குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில் கொடுத்துள்ள வாக்குறுதிகளைநிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பிரசார இயக்கம் நடத்தவுள்ளோம்.
இது தொடர்பாக சென்னையில்12ம் தேதி நடைபெறும் பொதுக் கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் புத்ததேவ் பட்டசார்யாவும், நாகர்கோவிலில் 20ம்தேதி நடைபெறும்கூட்டத்தில் கேரள முதல்வர் அச்சுதானந்தனும் கலந்து கொள்கின்றனர்.
தமிழகத்தில் இனிமேல் புதிய மாவட்டங்களை அறிவிக்கும்போது, ஏன் உருவாக்கவேண்டும், இதற்கான நோக்கம் என்ன என்பதையும் மக்களுக்கு அரசு விளக்கவேண்டும் என்றார் வரதராஜன்.