அதிமுக ஆட்சியில் தற்கொலை: 22 விவசாயிகள் குடும்பத்துக்கு நிதியுதவி - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த அதிமுக ஆட்சியில் வறுமையால் தற்கொலை செய்து கொண்ட 22 விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

காவிரியில் தண்ணீர் வராததாலும் வறட்சி காரணமாகவும் விவசாயிகள் எலிக்கறி திண்ணும் நிலைக்குத்தள்ளப்பட்டனர்.

பலர் தற்கொலையும் செய்து கொண்டனர். ஆனால், எலிக்கறியை அவர்கள் விரும்பி உண்டதாகவும் யாரும்தற்கொலை எல்லாம் செய்யவில்லை, அவையெல்லாம் இயற்கை மரணங்கள் தான் என்றும் அதிமுக அரசுகூறியது.

இந் நிலையில் சட்டசபையில் பேசிய கருணாநிதி,

வறுமையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொணட பிரச்சினை மிகவும் உருக்கமான ஒன்று. 22 விவசாயிகள்வறுமை, வறட்சி காரணமாக நஞ்சை பூத்துக் குலுங்கும் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் உயிர்துறந்துள்ளனர்.

தற்கொலை செய்த் கொண்ட 22 விவசாயிகளின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் எனறுகேட்டிருக்கிறார்கள்.

இதுவரை அவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கப்படாமல் இருந்தாலும், கமயூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின்வேண்டுகோளை அனைவருடைய வேண்டுகோளாக கருதி ஆகஸ்ட் 15ம் தேதி முதல் அவர்கள் ஒவ்வொருகுடும்பத்திற்கும்க தலா ரூ. 50,000 நிதியுதவி அளிக்கப்படும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+