For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்ஸ்பெக்டருடன் கள்ளக் காதல்: துடைப்பத்தால்அடி வாங்கிய பெண் எஸ்.ஐ தலைமறைவு

By Staff
Google Oneindia Tamil News

மதுரை:

கள்ளக் காதல் பிரச்சினையில் மதுரை இன்ஸ்பெக்டரின் மனைவியிடம் துடைப்பக்கட்டையால் அடி வாங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டரும், இன்ஸ்பெக்டரும்தலைமறைவாகிவிட்டனர்.

SI Meenambigai
தலைமறைவான எஸ்.ஐ. மீனாம்பிகை

அவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை அண்ணா நகர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவர்மாரிமுத்து.மகா ஊழல் பேர்வழி. வழக்கறிஞர் ஒருவர் சம்பந்தப்பட்ட வழக்கில் முதல் தகவல்அறிக்கையில் திருத்தம் செய்து மாட்டிக் கொண்டார்.

மதுரை வக்கீல்கள் மிகப் பெரிய அளவில் போராட்டமும் உண்ணாவிரதப்போராட்டமும் நடத்தியதையடுத்து மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்க மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது.

இதையடுத்து மாரிமுத்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மாரிமுத்துவுக்கும் அதே காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் சப்-இன்ஸ்பெக்டர்மீனாம்பிகைக்கும் கள்ளக் காதல் இருந்து வந்தது. காவல் நிலையத்திலேயே பலமுறைஇருவரும் குஜால் வேலைகளை செய்துள்ளனர்.

மாரிமுத்து குடியிருக்கும் மதுரை ஆயுதப் படை போலீஸ் குடியிருப்பிலேயேமீனாம்பிகையும் ஒரு வீட்டில் குடியிருந்தார். அங்கும் அவர்களது கள்ளக் காதல்தொடர்ந்தது.

இந் நிலையில சில நாட்களுக்கு முன்பு இருவரையும் கையும் களவுமாகப் பிடித்தார்மாரிமுத்துவின் மனைவி மகாலட்சுமி.

அத்தோடு நிகாமல் கணவரையும் சப்-இன்ஸ்பெக்டர் மீனாம்பிகையையும் துடைப்பக்கட்டையால் நடு ரோட்டில் வைத்து சாத்து சாத்தென்று சாத்திவிட்டார்.

அதிகாலையில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டரை மகாலட்சுமி துடைப்பக் கட்டையால்துரத்தி துரத்தி அடித்தது மதுரை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தையடுத்து மீனாம்பிகை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். (மாரிமுத்துஏற்கனவே சஸ்பெண்ட்டில் உள்ளார்). இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மீது வழக்குப் பதிவுசெய்ய மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் மாரிமுத்து மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர்தலைமறைவாகி விட்டார்.

மூன்று தனிப்படைகள் அமைத்து மாரித்துவை போலீஸார் தேடி வருகின்றனர்.

இதேபோல மீனாம்பிகை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மகாலட்சுமி அளித்துள்ளபுகாரின பேரில் அவர்மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பேரில்அவரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரும்தலைமறைவாகிவிட்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X