ஷோபாவிடம் சிக்கிய தமிழக கம்ப்யூட்டர் நிறுவன அதிபர்
திருவனந்தபுரம்:
தந்திரி மோகனருவுடன் நிர்வாணமாய் நின்று படம் எடுத்து பணம் பறிக்க முயன்றஷோபா ஜானுக்கும், ஒரு மலையாள நடிகருக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள்வெளியாகியுள்ளன.
இப்போது கைதாகியுள்ள ஷோபா ஜானை வரும் 8ம் தேதி வரை போலீஸ் காவலில்வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
இந் நிலையில் ஷோபாவின் விபச்சாரக் கும்பலைச் சேர்ந்த பெண்ணான சாந்தாவிடம்(இவரும் தந்திரியோடு நிர்வாண கோலத்தில் போட்டோவில் சிக்கியுள்ளதாகத்தெரிகிறது) போலீசார் விசாரணை நடத்தியபோது,
எனது கணவர் பிரகாசன் உயிருடன் இருந்தபோதே எனக்கு தந்திரிக்கும் தொடர்புஏற்பட்டது. அவர் இறந்த பிறகு இந்த நெருக்கம் அதிகமானது. பல உதவிகளை அவர்எனக்கு செய்தார். தனக்கும் இதுபோல பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுஅவரை ஷோபா ஜான் தொந்தரவு செய்து வந்தார் என்று கூறியுள்ளார்.
பல வசதியான பார்ட்டிகளை தன் வீட்டுக்கு வரவழைத்து அவர்களுடன் பெண்களைநிர்வாணமாக நிற்க வைத்து கூலிப் படை உதவியோடு படம் எடுத்து மிரட்டி பணம்பறித்துள்ளார் ஷோபா என்றும் சாந்தா கூறியுள்ளார்.
அதே போலத் தான் தந்திரியையும் தன் வலையில் சிக்க வைத்தார் என்றும்தெரிவித்துள்ளார் சாந்தா.
ஷோபா ஜானுக்கு கூலிப்படையை தயார் செய்து தந்து உதவி வந்தது நடிகர் ஒருவரும்தயாரிப்பாளர் ஒருவரும் என்று போலீசார் கூறுகின்றனர். இந்த நடிகர் மலையாளசினிமா மற்றும் சின்னத் திரையில் பிரபலமாக இருப்பவராம்.
தந்திரியை மிரட்ட கூலிப்படையை அனுப்பிய அந்த நடிகர், தந்திரி வருவதைஎதிர்பார்த்து ஷோபாவின் லிங்க் லட்சுமணன் பிளாட் அருகே உள்ள களத்திபறம்புரோட்டில் பிஎஸ்என்எல் பவன் அருகே வேனில் மறைந்திருந்தார் என்றும் போலீசார்கூறுகின்றனர்.
இதையடுத்து அந்த நடிகரும் கூலிப்படையினரும் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் போலீசாரிடம் ஷோபா கொடுத்துள்ள வாக்குமூலத்தில், நிர்வாணஅழகியுடன் இருப்பதுபோன்று படத்தை தந்திரியிடம் நான் காட்டியபோது அவர்அதிர்ந்துவிட்டார். அவரிடம் பணம் கொடுத்தால் தப்பிக்கலாம் என்ற கூறினேன்.
இதையடுத்து ரூ. 30 லட்சம் தர ஒப்புக் கொண்டார். அதற்கான செக்கைவாங்குவதற்காக தந்தரியின் செங்கன்னூர் வீட்டுக்கு புறப்பட்டேன். பாதி வழியில்அவருக்கும் எனக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நான் பிளாட்டுக்குதிரும்பிவிட்டேன் என்று ஷோபா கூறியுள்ளார்.
இந் நிலையில் ஷோபாவின் நிர்வாண போட்டோ மிரட்டல் டெக்னிக்கில்தமிழகத்தைச் சேர்ந்த ஒருவரும் சிக்கி பணம் இழந்த விவரமும் தெரியவந்துள்ளது.அவர் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யும் நிறுவனத்தின் என்ஜினியர் என்கிறார்கள்கேரள போலீசார்.
கொச்சியில் மசாஜ் மையம் தொடங்கிய ஷோபா, அதை ஹை-டெக்காகவிரிவுபடுத்தினார். உள்ளேயே பிரவுசிங் செய்ய வசதியும் செய்தார். அப்போது அந்தமையத்துக்கு கம்ப்யூட்டர்களை சப்ளை செய்தது தமிழகத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர்விற்பனை நிறுவனம்.
கம்ப்யூட்டர்களை சப்ளை செய்ததற்கு பணத்தை வாங்க அந்த நிறுவன உரிமையாளர்ஒருவர் கொச்சி சென்றுள்ளார். அப்போது யார் யாருக்கோ மசாஜ் செய்து விடறோம்.உங்களுக்கும் செய்கிறோம் என்று சொல்லி பெண்களை விட்டு மசாஜ் செய்துள்ளார்.மசாஜ் அப்படியே வேறு மாதிரியாக, அவரை நிர்வாணமாக்கி பெண்களும்நிர்வாணமாகி குஜால் செய்துள்ளனர்.மசாஜ் செய்ய வைத்த ஷோபா கம்ப்யூட்டர்களுக்கான பணத்தை பின்னர் தருகிறேன்என்று இழுத்தடித்துள்ளார்.
அடுத்தடுத்து கொச்சிக்குப் பணம் வாங்கப் போயும் வெறும் மசாஜ் தான்கிடைத்துள்ளது. இதனால் ஷோபாவை கம்ப்யூட்டர் நிறுவன உரிமையாளர்திட்டியுள்ளார்.
அப்போது பெண்களுடன் மசாஜ் அறையில் அவர் உல்லாசமாய் இருந்தபோட்டோக்களைக் காட்டி அதிர வைத்தாராம் ஷோபா.
மேலும் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார் ஷோபா. அவரும் பணம்தந்துள்ளார். உங்கள் பெயரிலேயே, கொச்சியில் ஒரு பிளாட் எடுத்துக் கொடுங்கள்என்று ஷோபா மிரட்டலாகக் கேட்க, அதையும் செய்துள்ளார்.
அப்படி அவரது பெயரில் ஒத்திக்கு எடுத்து பிளாட் தான ஷோபா தங்கியிருந்த லிங்க்லட்சுமணண் அபார்ட்மென்ட் என்கிறார்கள் கேரள போலீசார்.