காட்பாடி ரயில் நிலையத்தில் ஏ.கே-47 குண்டுகள்
சென்னை:
காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்த ரயில்வே பார்சலில் ஏ.கே.-47 துப்பாக்கிகளில் பயன்படுத்தப்படும்தோட்டாக்களும் ஒரு பிஸ்டலும் இருந்தன.
ரயில் நிலையத்தின் பார்சல் பிரிவில் கடந்த மாதம் 29ம் தேதி முதல் இந்தப் பெட்டி கேட்பாரற்றுக் கிடந்தது.இதையடுத்து ரயில்வே போலீசாருக்கு ரயில்வே பார்சல் ஊழியர்கள் தகவல் தந்தனர். இதைத் தொடர்ந்து ரயில்வேபாதுகாப்புப் படையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் மிகப் பாதுகாப்பான இடத்தில் வைத்து நேற்றிரவு இந்தப்பெட்டியை திறந்தனர்.
அப்போது அதில் ஏ.கே.-47ல் பயன்படுத்தும் தோட்டாக்கள் அடங்கிய 10 கார்ட்ரிஜ்களும் 5 காலிகார்ட்ரிஜ்களும், ஒரு 9 எம்எம் பிஸ்டலும், 7.62 எம்எம் ரக துப்பாக்கித் தோட்டாக்களும் இருந்தன.
மத்தியப் பிரதேசத்தில் மகாவ் நகரில் இருந்து பிரதீப் என்பவரின் பெயரில் பெங்களூருக்கு ரயில்வே பார்சலில்இந்தப் பெட்டி அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து பெங்களூர்-சென்னை ரயிலில் காட்பாடிக்கு இந்தப் பெட்டிஅனுப்பப்பட்டுள்ளது.
இதை அனுப்பியவர், பெற இருந்தவர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications