புதுவை முதல்வருக்கு பைக் பரிசு!
பாண்டிச்சேரி:
புதுவை முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாளையொட்டி காங்கிரஸ் மற்றும் பல்வேறுகட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் புத்தம் புதிய மோட்டார் சைக்கிளை பிறந்த நாள்பரிசாக கொடுத்து ரங்கசாமியை அசத்தினர்.
ரங்கசாமி தனது 57வது பிறந்த நாளை வெள்ளிக்கிழமை கொண்டாடினார்.இதையொட்டி காங்கிரஸ் தலைவர்கள், பிரமுகர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர்ரங்கசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏக்களும் கட்சிபாகுபாடின்றி முதல்வருக்கு நூதனமான பரிசைக் கொடுத்தனர். அதாவது புத்தம் புதியமோட்டார்சைக்கிள் ஒன்று முதல்வருக்குப் பிறந்த நாள் பரிசாக கொடுக்கப்பட்டது.
இதைப் பார்த்து ஆச்சரியமடைந்த ரங்கசாமி, எம்.எல்.ஏக்களுக்கு ஆச்சரியம் தரும்வகையில், புதிய பைக்கிலேயே தனது வீடு வரை சென்று அசத்தினார். புதுவைமுதல்வர் ரங்கசாமி படு வித்தியாசமானவர். ரொம்ப ரொம்ப எளிமையானவர்.
சட்டசபைக்கு மோட்டார் சைக்களில் தான் பெரும்பாலும் வருவார். அதே போலதிடீரென பைக்கை எடுத்துக் கொண்டு நகர் வலம் செல்வார். ஏதாவது டீக்கடையாகபார்த்து வண்டியை நிறுத்தி விட்டு ஜாலியாக மக்களிடம் பேசுவார்.
சிவாஜி கணேசனின் தீவிர ரசிகர். சிவாஜிக்கு சிலை வைத்த முதல் மாநிலம் என்றபெருமையை புதுவை பெறுவதற்கு ரங்கசாமி தான் காரணம். ரங்கசாமியின் தீவிரமுயற்சியால் தான் புதுவை மாநிலத்தில், கிழக்கு கடற்கரைச் சாலையில் சிவாஜியின்முழு உருவச் சிலை நிறுவப்பட்டது.
இந்த சிலையை வடித்த அதே சிற்பி தான் சென்னையில் வைக்கப்பட்டுள்ள சிவாஜிசிலையையும் வடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications