அணை: ஆந்திர முதல்வருடன் ஸ்டாலின் சந்திப்பு
ஹைதராபாத்:
பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர்ராஜசேகர ரெட்டியை, தமிழக அமைச்சர்கள் ஸ்டாலின், பொன்முடி ஆகியோர் இன்றுசந்தித்துப் பேசினர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் குப்பம அருகே பாலாற்றின் குறுக்கே ஆந்திரஅரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு தமிழகத்தின வட மாவட்டங்களில்கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.நீரை அணை கட்டி ஆந்திரா தடுத்துவிட்டால் இந்த மாவட்டங்களில் விவசாயமும்,குடிநீர் வினியோகமும் பாதிக்கப்படும் என தமிவகத்தின் அனைத்துக் கட்சிகளும்எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
ஆனால் பாலாற்றின் குறுக்கே கட்டுவது எங்களது உரிமை. அதை நிறுத்த மாட்டோம்என ஆந்திர அரசு கூறி வருகிறது.
இந் நிலையில் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின், பொதுப் பணித்துறைஅமைச்சர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் உயர் கலவி அமைச்சர் பொன்முடிஆகியோர் இன்று ஹைதராபாத் சென்றனர்.
அங்கு ஆந்திரமுதல்வர் ராஜசேகர ரெட்டியை இரு அமைச்சர்களும் சந்தித்துபாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதை தவிர்க்குமாறும் மாற்று ஏற்பாடுகள் குறித்தும்பேசினர்.












Click it and Unblock the Notifications