சென்னை-புதுவை: நாளை முதல் மின்சார ரயில்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
சென்னை எழும்பூருக்கும், பாண்டிச்சேரிக்கும் இடையிலான நாளை முதல் மின்சாரரயில் ஓடத் தொடங்குகிறது.
சென்னையிலிருந்து புதுவைக்கு தற்போது ரயில் வசதி இல்லை. விழுப்புரம்சென்றுதான் புதுவைக்கு ரயிலில் செல்ல முடியும். அதைத் தவிர்த்து புதுவைக்கும்,சென்னைக்கும் இடையே நேரடியான மின்சார ரயிலை இயக்க வேண்டும் என்றகோரிக்கை நீண்டகாலமாக இருந்து வந்தது.இதையடுத்து இரு நகரங்களுக்கும் இடையே நேரடிமின்சார ரயிலை விட ரயில்வேநிவாகம் நடவடிககை எடுத்தது. நாளைமுதல் இந்த மின்சார ரயில் போக்குவரத்துதொடங்குகிறது. வாரம் 5 நாட்கள் இந்த ரயில் இயங்கும்.
புதுவையிலிருந்து காலை 5.15 மணிக்குப் புறப்படும் ரயில் 9.15 மணிக்கு எழும்பூர்வந்தடையும். மறு மார்க்கத்தில்மாலை 6 மணிக்கு எழும்பூரிலிருந்து புறப்பட்டு இரவு9.45 மணிக்கு புதுவையை சென்றடையும்.
இந்த ரயில் போக்குவரத்தை புதுவை முதல்வர் ரங்கசாமி நாளை அந்த மாநிலத்தில்தொடங்கி வைக்கிறார்.












Click it and Unblock the Notifications