பஹ்ரைன் விபத்தில் பலியானவர்கள் கிராமத்தில் கந்து வட்டிக் கொடுமை: தந்தை,மகன் கைது!
கடலூர்:
பஹ்ரைன் தீ விபத்தில் 3 உயிர்களைப் பலி கொடுத்த கடலூர் மாவட்டம் சேதுவராயன்குப்பம் கிராமத்தில் அநியாய வட்டிக்கு பணம் கொடுத்து வந்த தந்தை, மகனைபோலீஸார் கைது செய்தனர்.
பஹ்ரைன் நாட்டில் சமீபத்தில் நடந்த தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 16 பேர்பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சோகம் மறைவதற்குள் இன்னொரு பிரச்சினைஎழுந்துள்ளது.பஹ்ரைன் தீ விபத்தில் இறந்த ராஜவேல், ராஜா, பாலுச்சாமி ஆகியோர் சேதுவராயன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த கனகசபை என்பவரும்அவரது மகன் அசோகன் என்பவரும் இக் கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு கந்துவட்டிக்கு பணம் கொடுத்து வந்துள்ளனர்.
வெளிநாடுகளுக்குப் போக விரும்புபவர்கள் இவர்களிடம்தான் பணத்தை வாங்கிக்கொண்டு செல்வார்களாம். ஆனால் வாங்கிய தொகையை விட பல மடங்கு பணத்தைதிரும்பக் கறப்பது இவர்களது வழக்கம்.
இப்போதும் கூட பலியான 3 பேரின் குடும்பத்தினரையும் பணம் கேட்டு தந்தையும்,மகனும் மிரட்டி வந்தனர். பலியானவர்கள் குடும்பத்துக்கு அரசு கொடுத்த நிவாரணத்தொகையான ரூ. 2 லட்சத்தைத் தந்துவிடும்படி மிரட்டியுள்ளனர்.
இறந்த 3 பேரும் பஹ்ரைன் செல்வதற்காக ரூ. 1.5 லட்சம் முதல் இரண்டரை லட்சம்வரை கடன் வாங்கியிருப்பதாகத் தெரிகிறது.
இந் நிலையில் கனகசபையிடம் தான் 10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ரூ. 40,000பணத்திற்குப் பதில் இபபோது ரூ. 1.40 லட்சம் பணத்தை அவர் திரும்பக் கேட்பதாகரங்கநாதன் என்பவர்மாவட்ட ஆட்சித் தலைவர் ககந்தீப் சிங் பேடிக்கு புகார்அனுப்பினார்.
இதுகுறித்து விசாரணை நடத்துமாறு மாவட்ட காவலதுறைக் கண்காணிப்பாளருக்குஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து கனகசபையும்,அசோகனும்கைது செய்யப்பட்டனர்.












Click it and Unblock the Notifications