விடுதலைப் புலிகள் தாக்குதலில் 62 கடற்படை வீரர்கள் பலி!
Subscribe to Oneindia Tamil
திரிகோணமலை:
விடுதலைப் புலிகள் இன்று நடத்திய பயங்கர தாக்குதலில் இலங்கை கடற்படையைச்சேர்ந்த 62 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மாவிலாறு அணையின் மதகுகளை விடுதலைப் புலிகள் மூடியதைத் தொடர்ந்து கடந்த2 வாரங்களாக புலிகளுக்கும், இலங்கை பாதுகாப்புப் படையினருக்கும் இடையேகடும் சண்டை நடந்து வருகிறது.நார்வே தூதர்பாயரின் மத்தியஸ்த்தைத் தொடர்ந்து மதகுகளை திறந்து விட புலிகள்சம்மதித்தனர். ஆனால் இதை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்துதாக்குதல் நடத்தப்படும் என இலங்கை அரசு அறிவித்தது.
இந்த நிலையில், இன்று திரிகோணமலையில் உள்ள கடற்படை முகாம் மீதுவிடுதலைப் புலிகள் சரமாரியாக ராக்கெட் வீசித்தாக்குதல் நடத்தினர். கடற்படைவாகனம் ஒன்றும் குண்டு வைத்துத்தகர்க்கப்பட்டது. இந்த பயங்கர தாக்குதலில் 62கடற்படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
தொடரும் தாக்குதல்களால் இலங்கை நிலை மேலும் மேலும் சிக்கலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications