ஜெவிடம் திட்டு வாங்காத புஷ்-ராமதாஸ் தாக்கு
சென்னை:
ஆட்சியை இழந்து அதிமுக பலவீனம் அடைந்துள்ளதால் அந்த கட்சியைச்சேர்ந்த இளைஞர்கள், பாமகவுக்கு வர வேண்டும் என அக் கட்சியின்நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட பாமக பொதுக்குழு கூட்டம் அம்பத்தூரில் நடந்தது.இக்கூட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது,பாமகவை மரம் வெட்டி கட்சி என்று ஜெயலலிதா விமர்சித்தார். அவரைஅன்பு சகோதரி என்று கூறி கோட்டையில் உட்கார வைத்ததே நாம் தான்.அதன் பின் அவரது செய்கைகளை கண்டித்து 2 மாதத்தில் கூட்டணியில்இருந்து வெளியேறினோம்.
தமிழக தலைவர்களை மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அத்தனைதலைவர்களையும் ஜெயலலிதா திட்டி தீர்த்துவிட்டார். புஷ்ஷை மட்டும்தான்திட்டவில்லை. அவர் இங்கிதமே தெரியதாவர். கட்சியைஒ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து விடுங்கள் என்று நான் ஏற்கனவேஅவருக்கு கூறியிருக்கிறேன்.
அதை இப்போதாவது செய்யட்டும். நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து,சட்டப்பேரவை தேர்தலிலும் நமது அணி வென்றது. உள்ளாட்சி தேர்தலில்மக்களுக்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு நமக்கு உள்ளது.உள்ளாட்சிகளில் ஒன்றரை லட்சம் பதவிகள் உள்ளன.
நமது கூட்டணி கட்சிகள் அவற்றை கைப்பற்ற வேண்டும். அதற்குஒற்றுமையாக செயல்பட வேண்டும். ஆட்சியை இழந்து அதிமுக பலவீனம்அடைந்துள்ளது. அந்தக் கட்சியில் உள்ள இளைஞர்கள் பாமகவுக்கு வரவேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications