நான் யார் என்று காட்டுவேன்: ஷோபா ஆவேசம்
திருவனந்தபுரம்:
என்னுடன் தொடர்பு வைத்திருந்த பிரபலங்களைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுநான் யார் என்பதைக் காட்டுகிறேன் என மோகனரு புகழ் ஷோபா கூறியுள்ளார்.
தந்திரி கண்டரரு மோகனருவை அழகி சாந்தாவுடன் ஏடாகூடமாக போட்டோ எடுத்துபோலீஸ் பிடியில் சிக்கியுள்ள விபச்சார விடுதி தலைவி ஷோபா, மலையாளப்பத்திரிக்கை ஒன்றுக்கு படு ஆவேசமாக பேட்டி கொடுத்துள்ளார்.
அதில், தந்திரி ஒன்றும் உத்தமர் அல்ல. அவரைப பற்றிய அத்தனை ஆதாரங்களும்என்னிடம் உள்ளன. அவற்றை நான் பத்திரமாக பதிவு செய்து வைத்துள்ளேன்.என்னை இந்த சிக்கலில் மாட்டி விட்டதே தந்திரிதான்.
அதேபோல ஒரு பெரிய போலீஸ் அதிகாரியும் ரூ. 5 லட்சம் வரை பணம் வாங்கிக்கொண்டு என்னை சிக்க வைத்துவிட்டார். தந்திரி போட்ட கணக்கு தப்பாகப்போகிறது.என்னுடன் கடந்த 8 மாத காலமாக தந்திரி போனில் பேசியதை நான் பதிவு செய்துவைத்துள்ளேன்.
அதேபோல கடந்த பல வருடங்களாக தனககும், தந்திரிக்கும் உள்ள தொடர்புகள்குறித்து சாந்தா கூறியதையும் பதிவு செய்து வைத்துள்ளேன்.
இந்த ஆதாரங்களை நான் வைத்திருந்தால் போலீஸார் அழித்து விடுவார்கள் என்பதுஎனக்குத் தெரியும் என்பதால் இருக்க வேண்டிய இடத்தில் அவை பத்திரமாக உள்ளன.
எனது வாழ்ககையை அழிததவர்தான் இந்த தந்திரி. இதுவரை அவர் விளையாடினார்.இனிமேல நான் விளையாடப் போகிறேன். இப்போது ரிமாண்ட் பீரியடில் நான்இருககிறேன். வெளியே வந்த பிறகு அத்தனை உண்மைகளையும் சொல்லப்போகிறேன்.
என்னுடன் சேர்ந்து கைதாகியுள்ள அனில்குமார் (இவர் புரோக்கராக செயல்பட்டவர்என்கிறது போலீஸ்) எனது தம்பி தான். குண்டர்களுக்கும் அவனுக்கும் தொடர்புஇருப்பதால் அவன் எனது தம்பி இல்லை என்று ஆகி விடாது.நான் யா ர்என்பதை இனிமேல்தான் அத்தனை பேரும் தெரிந்து கொள்ளப்போகிறார்கள். எனது கணவருக்கு இந்த விவகாரங்கள் தெரிவது குறித்த நான்கவலைப்படவில்லை. இனிமேல் தெரிந்தால் என்ன, தெரியாவிட்டால் என்ன. அந்தஅளவுக்கு என்னைக் கேவலப்படுத்தி விட்டார்கள் என்று கூறியுள்ளார் ஷோபா.
இவரது கணவர் வளைகுடாவில் பணியாற்றுகிறார்.
இதற்கிடையே ஷோபாவின் தூண்டில் மீனாக பயன்படுத்தப்பட்ட சாந்தா என்னஆனார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.போலீஸ் பிடியில்தான் இருக்கிறாரா அல்லது தலைமறைவாகி விட்டாரா என்ற கேள்விஎழுந்துள்ளது.
தந்திரி-கர்நாடக பெண்கள் தொடர்பு:
இதற்கிடையே தந்திரிக்கும் மங்களூரைச் சேர்ந்த சில விபச்சாரப் பெண்களுக்கும் தொடர்பு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இவர்கள் நடிகர் பெச்சுரஹ்மான் மூலம் ஷோபாவுக்கு அறிமுகமாகியுள்ளனர். ஷோபா மூலமாக தந்திரிக்கு இந்தப் பெண்கள் பழக்கமாகியுள்ளனர். அவர்களுடனும் தந்திரிகுஜால் செய்ததாகவும் கூறப்படுகிறது.
ஷோபாவிடம் சிக்கிய பெங்களூர், மங்களூர் பெண்களின் டெலிபோன் நம்பர்களை வைத்து அவர்களிடம் விசாரணை நடத்த கேரள போலீசார் முடிவு செய்துள்ளனர்.