சிதம்பரம் கோவிலில் தமிழுக்குத் தடை நீடிக்கும்!
Subscribe to Oneindia Tamil
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருவாசகம்,தேவாரம் ஆகிய பாடல்களைப் பாடவிதிக்கப்பட்டுள்ள தடை நீடிக்கும் என சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாமல்,தீக்ஷிதர்களின் கட்டுப்பாட்டில், நடராஜர் கோவில் உள்ளது. இங்கு தேவாரம்,திருவாசகம் ஆகிய பாடல்களைப் பாட தீக்ஷிதர்கள் தடை விதித்துள்ளனர்.மேலும் இதுதொடர்பாக சிதம்பரம் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துஇடைக்காலத் தடை உத்தரவும் வாங்கி வைத்துள்ளனர்.
இந்த உத்தரவை தளர்த்த வேண்டும் என்று கோரி தமிழ் ஆர்வலர்கள் சார்பில் இந்தநீதிமன்றத்தில் மனு செய்யப்படடது.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி அம்பேத்கர், தீக்ஷிதர்கள் தொடர்ந்த வழக்கில்இறுதித் தீர்ப்பு வரும் வரையில், தற்போது விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவுதொடர்ந்து நீடிக்கும் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தமிழ் ஆர்வலர்கள் விவாதித்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications