கள்ளக்காதல்: ஆற்றில் மூழ்கடித்து கணவர் கொலை

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

கள்ளக் காதலை கண்டித்ததால் ஆற்றில் மூழ்கடித்து கணவரை கொலை செய்த பெண்உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி டோல்கேட் பிச்சாண்டார் கோயில் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளிபெரியசாமி (35). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

இவர்கள் பீமா நகர் பகுதியில் குடியிருந்தபோது அங்கு பட்டறை நடத்தி வரும்ராஜாவுடன் லட்சுமிக்கு கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.

பெரியசாமிக்கு இது தெரிய வந்ததையடுத்து ராஜாவையும், லட்சுமியையும்கண்டித்தார். ஆனால் கள்ளத் தொடர்பை அவர்கள் நிறுத்தவில்லை. இதனால்பெரியசாமி, பிச்சாண்டார் கோயில் பகுதிக்கு வீட்டை மாற்றினார்.

இந் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் லட்சுமி திடீரென காணாமல் போனார்.விசாரித்தபோது கள்ளக் காதலால் கர்ப்பமடைந்த லட்சுமி, ராஜாவுடன் வேறு ஊரில்வசிப்பது தெரியவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பெரியசாமி, ராஜாவை சந்தித்து மிரட்டினார்.

இந் நிலையில் கடந்த 4ம் தேதி சரவணன், ஆதியன் ஆகிய இருவரும் பெரியசாமிக்குமது வாங்கிக் கொடுத்தனர். போதையில் தள்ளாடிய பெரியசாமியை காவிரியில்குளிக்க அழைத்து சென்று திருச்சி, கரூர் சாலையில் கம்பரசம் பேட்டை காவிரிஆற்றில் தண்ணீரில் மூழ்கடித்து கொன்றனர்.

நேற்று காலை குடமுருட்டி பாலம் அருகேயுள்ள அய்யாளம்மன் படித்துறையில்பெரியசாமியின் உடல் கரை ஒதுங்கியது. பின்னர் போலீசார் அங்கு வந்துபெரியசாமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்.

விசாரணையில் லட்சுமி தூண்டுதலின்பேரில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.இதையடுத்து லட்சுமி, சரவணன், ஆதியன் ஆகிய மூன்று பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+