ரயில் தண்டவாளம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞர் படுகாயம்
சென்னை:
ரயில் நிலையத்தில் மின் கம்பத்தில் திடீரென மின்சாரம் பாய்ந்ததில் அதில் சாய்ந்துஉட்கார்ந்திருந்த இளைஞர் படுகாயமடைந்தார். மேலும் 10 பேரும் காயமடைந்தனர்.
சென்னை கொருக்குப்பேட்டைச்ை சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியில் உள்ளரயில்வே தண்டவாளம் அருகே உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர்.அப்போது மின்சார ரயிலுக்கான மின் கம்பியில் ஒரு காக்கா வந்து உட்கார்ந்தது.அடுத்த நொடியே ஏதோ சார்ட் சர்க்யூட் கோளாறு ஏற்பட்டு அந்த மின் கம்பியில்இருந்து படபடவென சத்தத்துடன் தீப்பொறிகள் பறந்தன.
அப்போது அருகே மின் கம்பத்தில் சாய்ந்து அமர்ந்திருந்த கார்த்திக் (17) என்றஇளைஞர் மீது மின்சாரம் பாய்ந்தது. மின் கம்பத்தை விட்டு விலக முடியாமல் அவரைகம்பத்தோடு பினைத்தது மின்சாரம்.
அவரது அலறலைக் கேட்டு அங்கிருந்த 10 இளைஞர்களும் அவரைப் பிடித்துஇழுத்தனர். அப்போது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. ஆனாலும் கண்இமைக்கும் நேரத்தில் கார்த்திக்கை மின் கம்பத்திலிருந்து இழுத்துவிட்டனர் அந்தஇளைஞர்கள்.
ஆனால், அந்த சில வினாடிகளில் கார்த்திக்கின் முதுகுப்புறம் முழுவதும்கருகிவிட்டது.
அதே போல அவரை இழுத்த 10 இளைஞர்களுக்கும் உடலில் மின்சாரம் பாய்ந்ததுலேசான காயம் ஏற்பட்டது.
உயிருக்கு ஆபத்தான நிலையில் கார்த்திக் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications