அப்பல்லோவில் ஆதித்தன்-கருணாநிதி பார்த்தார்
சென்னை:
தூத்துககுடிமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காங்கிரஸ் எம்.பி. தனுஷ்கோடிஆதித்தன் சிறப்பு விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு அப்பல்லோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி அருகே நடந்த கார் விபத்தில் சிக்கிய தனுஷ்கோடி ஆதித்தன் படுகாயம்அடைந்தார். அவரது உடல் முழுவதும் பல இடங்களில் எலும்பு முறிவுஏற்பட்டுள்ளது. வலது கை சிதைந்து போனது.அவரது மனைவி இந்திராதேவி சம்பவ இடத்திலேயே பலியானார். தூத்துக்குடியில்தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆதித்தனின வலது கரம்அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றப்படடது.
இந்த நிலையில் சிறப்பு விமானம் மூலம் ஆதித்தன் சென்னை கொண்டு வரப்பட்டார்.
பின்னர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விமான நிலையத்தில்மத்திய அமைச்சர் வாசன், காங்கிரஸ்தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும்நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் திரண்டிருந்தனர்.
அப்பல்லோவில் ஆதித்தனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் தனுஷ்கோடி ஆதித்தனை இன்று காலை அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று முதல்வர்கருணாநிதி பார்த்தார். அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறுகையில்,
ஆதித்தன் உடல் நிலை மோசமாகத் தான் உள்ளது. அவர் உயிர் பிழைக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள்தெரிவித்தனர் என்றார்.
கருணாநிதியுடன் அமைச்சர்கள் ஸ்டாலின், பொன்முடி, வேலு ஆகியோரும் வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications