For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை பேராசிரியைக்கு கல்பான சாவ்லா விருது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பிரபல கணித பேராசிரியையும், ஐஐடியில் 17 ஆண்டுகள் பணியாற்றியவருமானடாக்டர் வசந்தா கந்தசாமிக்கு இந்த ஆண்டுக்கான கல்பான சாவ்லா விருதுவழங்கப்படவுள்ளது.

கல்வி, சமூகத்துறையில் சிறந்து விளங்கும் பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருதைதமிழக அரசு வழங்கி வருகிறது.

இந்த ஆண்டுக்குரிய விருதுக்கு டாக்டர் வசந்தா கந்தசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

டாக்டர் வசந்தா கந்தசாமி, கணித துறையில் சிறந்த ஆய்வாளர். ஐஐடியில் 17ஆண்டுகள் பணியாற்றியுளளார். கணிதத்தில் பல மாணவர்கள், டாக்டர் பட்டம் பெறவழிகாட்டியாக இருந்துள்ளார்.

கணிதத்துறையில் இவர் படைத்துள்ள 14 நூல்களில் பெரும்பாலானவைஅமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளன.

ஐஐடியில் பணியாற்றும் 480 ஆசிரியர்களில் இவர் ஒருவர் மட்டுமே, சமூக நீதிஅடிப்படையில் (இட ஒதுக்கீடு) ஆசிரியர்கள நியமிக்கப்படவேண்டும் என்பதைவலியுறுத்தி, நிர்வாகத்துடன் போராடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வசந்தா கந்தசாமியின் கணித அறிவாற்றலையும், சமூக நீதியை நிலை நாட்ட தீரமுடன்போராடிய மன உறுதியையும் பாராட்டி கல்பான சாவ்லா விருது வழங்கப்படுகிறது.

ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் பதக்கம் ஒனறையும் கொண்டது இந்த விருது.

சுதந்திர தினத்தன்று இந்த விருது வழங்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X