சென்னையிலும் எல்லோ லைன்-ப்ளூ லைன் பஸ்கள்
சென்னை:
டெல்லியில் இருப்பது போல சென்னையிலும், எல்லோ லைன், ப்ளூ லைன் விரைவுப்பேருதுகள் அறிமுகமாகவுள்ளன.
சட்டசபையில் போக்குவரத்துத் துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீதானவிவாதததிற்கு பதில் அளித்து அவர் பேசுகையில்,சென்னையில் தற்போது 40 கிமீ தொலைவுக்குத் தான் நகரப்பேருந்துகள்இயக்கப்படுகின்றன. ஆனால், நகரம் விரிவடைந்து கொண்டே போகிறது. இதனால்இனிமேல் 50 கிமீ தூரம் வரை நகரப் பேருந்துகள் இயக்கப்படும்.
சென்னை நகர மக்களின் தேவையினைக் கருத்தில் கொண்டு டெல்லி உள்ளிட்ட சிலமாநிலங்களில் இயங்கப்படுவதைப் போல, ஒரு இடததிலிருந்து புறப்பட்டுகுறிப்பிட்ட இடம் வரை இடையில் எங்கும் நிற்காமல் செல்லும் எல்லோ லைன் என்றபெயருடைய சிறப்பு பேருந்துகள் சென்னையிலும் அறிமுகப்படுத்தப்படும்.
இதேபோல குறிப்பிட்ட இடத்திலிருந்து கிளம்பி இடையில் சில முக்கியநிறுத்தங்களில் மட்டும் நின்று செல்லும் ப்ளூ லைன் ரக பேருந்துகளும் சென்னையில்அறிமுகப்படுத்தப்படும்.
தமிழக போக்குவரத்துக் கழகங்களுக்கு 1,000 புதிய பேருந்துகள் வாங்க ரூ. 100கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுளளது. மேலும் 1,000 புதிய பேருந்துகளை, தமிழகபோக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்தின் நிதியுதவியுடன் வாங்க முயற்சிமேற்கொள்ளப்படும்.
நிலுவையில் உள்ள 230 புதிய பேருந்துகைளயும் சேர்த்து மொததம் 2,230 புதியபேருந்துகள் இந்த ஆண்டு இயக்கப்படும்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்களில் உள்ள விரைவுப்போக்குவரத்துக் கழக பேருந்து நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டு பயணிகளுக்குசிறப்பு வசதிகள் செய்துதரப்படும்.
மேலும் முக்கிய நகரங்களில் கம்ப்யூட்டர் முன் பதிவு வசதியும் ஏற்படுத்தப்படும்.
நிர்வாகத் திறனை மேலும் கூட்டும் விதமாகவும், வளர்ந்து வரும் போக்குவரத்துத்தேவையினை பூர்த்தி செய்யும் வகையிலும் திருவண்ணாமலையைத்தலைமையிடமாகக் கொண்டு புதிய போக்குவரத்துக் கோட்டம் ஏற்படுத்தப்படும்என்றார் நேரு.












Click it and Unblock the Notifications