For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சத்துணவில் கண்ணாடி-மருத்துவமனையில் மாணவர்கள்

By Staff
Google Oneindia Tamil News

திண்டிவனம்:

சத்துணவில் கண்ணாடித் துண்டுகள் இருந்ததால் அதை சாப்பிட்ட 102 மாணவ, மாணவிகள் வயிற்று வலியால்துடித்தனர். இதையடுத்து அனைவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் முட்டையுடன் சத்துணவுவழங்கப்பட்டது. 102 மாணவ, மாணவியர் இதனை உண்டனர்.

சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. எல்லா மாணவ, மாணவிகளும் வலியால்துடித்ததால் பயந்து போன ஆசிரியர்கள் அவர்கள் அனைவரையும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்குகொண்டு சென்றனர்.

அவர்கள் சாப்பிட்ட உணவும் சோதிக்கப்பட்டது. அப்போது அதில் ஏகப்பட்ட கண்ணாடித் துண்டுகள் இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.

அதே போல விருத்தாலம் அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளில் 17 பேருக்கு வாந்தியும்மயக்கமும் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X