For Quick Alerts
For Daily Alerts
Just In
முதல்வருக்கு மிரட்டல்-மனித வெடிகுண்டாவோம்
சென்னை:
போலீஸ் தேர்வின் முடிவுகளை உடழே வெளியிடாவிட்டால் மனித வெடிகுண்டாக மாறி சுதந்திர தினத்தன்றுமுதல்வர் கருணாநிதியை கொல்வோம் என்று மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
கடந்த ஆண்டு போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வு நடந்தபோது வினாத் தாள் லீக் ஆனது. இதையடுத்துமீண்டும் தேர்வு நடந்தது. அப்போதும் வினாத் தாள் லீக் ஆனது. இதையடுத்து உயர் அதிகாரிகள் சிலர்சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சில போலீசார் கைதும் செய்யப்பட்டனர்.இந்த வினாத் தாள் லீக் காரணமாக, தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாமையம் மற்றும் சில மூத்த போலீஸ் அதிகாரிகள்,பத்திரிக்கை அலுவலகங்களுக்கு மொட்டை கடிதங்கள் வந்துள்ளன.
அதில், போலீஸ் வேலைக்கான எழுத்துத் தேர்வு முடிவை 14ம் தேதிக்குள் வெளியிட வேண்டும். இல்லாவிட்டால்மனித வெடிகுண்டாக மாறி சுதந்திர தினத்தன்று கொடியேற்ற வரும் முதல்வர் கருணாநிதியை கொல்வேம் என்றுஎச்சரிக்கப்பட்டுள்ளது.
கடிதம் எழுதிய நபரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, August 10, 2006, 5:30 [IST]