இட ஒதுக்கீடு-பிரதமருடன் திமுக கூட்டணி எம்பிக்கள் சந்திப்பு
டெல்லி:
பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டைஉடனடியாக அமலாக்க வேண்டும், நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே இதற்கானசட்டத் திருத்தத்தை கொண்டு வர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுககூட்டணியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், பாமக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியகம்யூனிஸ்ட் எம்.பிக்கள் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் அனைவரும்இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரதுஅலுலகத்தில் சந்தித்தனர்.மத்திய அமைச்சர்கள் பாலு, தயாநிதி, அன்புமணி ஆகியோர் தலைமையில் இக் குழுவினர் பிரதமரை சந்தித்துஇட ஒதுக்கீட்டை உடனே அமலாக்க வேண்டும் என்று கோரி மனு தந்தனர்.
அந்த மனுவில், இட ஒதுக்கீட்டை எந்த வகையில் நீர்த்துப் போகச் செய்யக் கூடாது. திட்டமிட்டபடி அப்படியேஇட ஒதுக்கீட்டை அமலாக்க வேண்டும். நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே 27சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாவை தாக்கல்செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சில நாட்களுக்கு முன் பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதமும் அனுப்பியிருந்துகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications