செவ்வாய் கிரகம்: இ-மெயிலில் பரவும் வதந்தி
சென்னை:
ஆகஸ்ட் 27ம் தேதி நிலவைப் போல மிகப் பெரியதாக செவ்வாய் கிரகம்காட்சி தரும்என இமெயில், எஸ்.எம்.எஸ். மூலம் செய்தி பரவி வருகிறது. ஆனால், இதுமுற்றிலும் தவறான தகவல் என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பமையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மையத்தின் செயல் இயக்குனர் அய்யம் பெருமாள் வெளியிட்டுள்ளஅறிக்கையில்,இந்த செய்திமுற்றிலும் தவறானது, முழுமையான வதந்தி. இதை மக்கள் நம்பவேண்டாம்.
செவ்வாய் கிரகத்தை யாரும் வெறும் கண்களால் பார்க்க முடியாது. ஆகஸ்ட் 27ம்தேதி செவ்வாய்கிரகம் காலை 7.15 மணிக்கு உதயமாகும். அடுத்த வினாடியே அதுஅஸ்தமனமாகி விடும். சூரியனின் பிரகாசம் காரணமாக செவ்வாய் கிரகத்தைபூமியிலிருந்து நாம் சாதாரண கண்களால் பார்க்க முடியாது.
மேலும், பூமிக்கும், செவ்வாய் கிரகத்திற்கும் இடையிலான தூரம் 38 கோடி கிலோமீட்டர் ஆகும். எனவே மாலையில் சூரியனுக்கு அருகே செவ்வாய் கிரகம்வரும்போது பார்ப்பதாக இருந்தாலும் கூட மிக மிகச் சிறிதாகவே கிரகம் காணப்படும்.
அதையும் கூட நாம் வெறும் கண்ணால் பார்ப்பது இயலாத காரியமாகும் என்றுவிளக்கியுள்ளார் அய்யம்பெருமாள்.












Click it and Unblock the Notifications