ஜனனி முன் ஜாமீன் மனு வேறு நீதிபதிக்கு மாற்றம்
டெல்லி:
நடராஜனின் தோழி ஜனனி உள்ளிடடோரின் முன் ஜாமீன் மனுக்கள், வேறு நீதிபதிக்குமாற்றப்பட்டுள்ளன.
ஜனனி, அவரது தாயார் ரமீஜா உள்ளிட்ட நான்கு பேர் மீது கள்ள நோட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரிநான்கு பேரும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்துள்ளனர்.இந்த மனுக்களை நீதிபதி சம்பத்குமார் விசாரிப்பதாக இருந்தது. ஆனால் கஞ்சாவழக்கில் தான் கைதானபோது நீதிபதி சம்பத்குமார் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார்.
இதனால் இந்த முன் ஜாமீன் மனுக்களை அவர் விசாரிக்கக்கூடாது. அவருக்குப் பதில்வேறு நீதிபதியிடம் மனுக்களை விசாரணைக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிஜனனி சார்பில் மதுரை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் மனு கொடுக்கப்பட்டது.
இதை ஏற்று தற்போது ஜனனி உள்ளிட்டோர் தொடர்பான முன் ஜாமீன் மனுக்களைநீதிபதி ஜெயபால் விசாரிப்பார் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நீதிபதி ஜெயபால்முன்னிலையில் இன்று மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
அப்போது அரசுத் தரப்பில் முன் ஜாமீன் மனுக்களுக்கு பதில் தாக்கல் செய்ய காலஅவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து நாளைக்கு விசாரணையை ஒத்திவைத்துநீதிபதி ஜெயபால் உத்தரவிடடார்.












Click it and Unblock the Notifications