For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை விமான நிலையத்தில் வாலிபர் கடத்தல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சிங்கப்பூரிலிருந்து ஒரு கும்பல் கொடுத்தனுப்பிய தங்க நகைகளுடன் சென்னைவந்தவரை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து கடத்திச் சென்றது ஒரு கும்பல்.

அவரை விடுவிக்க ரூ. 1 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய அந்தக் கும்பலை சென்னைபோலீஸார் மின்னல் வேகத்தில் செயல்பட்டு வளைத்துப் பிடித்தனர்.

நெல்லை மாவட்டம் திருச்சிற்றம்பலம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன்.சிங்கப்பூரில் கடந்த ஒரு வருடமாக வேலை பார்த்து வருகிறார். 2 நாட்களுக்கு முன்புஅவர் சென்னை கிளம்பினார்.

சிங்கப்பூர் விமான நிலையத்தில் அவரை சந்தித்த ஒரு கும்பல் சென்னையில் கிரிபாபுஎன்பவரிடம் கொடுத்துவிடுமாறு கூறி ஒரு நகை பொட்டலத்ததை அவரிடம் தந்தது.இதற்காக அவருக்கு கமிஷனும் தரப்பட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில் அவரை சந்திக்க கிரிபாபுவிடம் நகை பொட்டலத்தைதந்தார் பாலமுருகன். அப்போது இன்னொரு பொட்டலம் எங்கே என்று கிரிபாபுகேட்கவே, ஒரு பொட்டலம் தான் தந்தார்கள் என்று கூறிவிட்டு கிளம்பினார்பாலமுருகன்.

விமான நிலையத்திலிருந்து வெளியேறிய அவர் நெல்லை செல்வதற்காக டாக்ஸிபிடிக்க வந்தார். அப்போது கிரிபாபு தலைமையில் ஒரு கும்பல் அவரை வழிமறித்துகாரில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து பறந்தது.

கடத்தப்பட்ட பாலமுருகன், கோயம்பேடு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஒருவீட்டில் சிறை வைக்கப்பட்டார்.

பின்னர் பாலமுருகனின் தந்தை மருதையாவுக்கு அக் கும்பல் போன் செய்தது.உங்களது மகன் எங்களது பிடியில் உள்ளார். அவரை பத்திரமாக விடுவிக்கவேண்டுமானால் ரூ. 1 லட்சம பணத்தை கொடுக்க வேண்டும் எனறு அக்கும்பல்மிரட்டியது.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மருதையா உடனடிாயக சென்னைக்கு வந்தார்.குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு அவரை வருமாறு கடத்தல்கும்பல் பணித்தது.மருதையாவும் அந்த வீட்டிற்குப் பானார்.

அங்கு பாலமுருகன் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில வைக்கப்பட்டிருந்தார். 1ல்டசம் பணம் கொடுத்தால் பையனை கூட்டிச் செல்லலாம் என்று அங்கிருந்தவர்கள்மருதையாவிடம் தெரிவித்தனர்.

எனது பையனை எதுவும் செய்து விடாதீர்கள். பணத்துடன் வருகிறேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறிய மருதையா நேராக காவல்துறை ஆணையர்அலுவலகம் விரைந்தார்.

ஆணையர் லத்திகா சரணை சந்தித்து விவரத்தைத் தெரிவித்தார்.

கூடுதல் ஆணையர் ஜாங்கிட்டை அழைத்த ஆணையர், இதுதொடர்பாக உடனடியாகநடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

உடனே ஒரு தனிப்படையை அமைத்த ஜாங்கிட், மருதையாயைவிட்டு கடத்தல்கும்பலுடன் பேச வைத்தார். பணத்துடன் வருவதாக கூறிய மருதையாவுடன் போலீஸார் மாறு வேடத்தில் அந்த வீட்டுக்குச் சென்றனர்.மருதையாவிடம் ஒரு பெட்டியைக் கொடுத்து உள்ளே அனுப்பினர். அவர் உள்ளேசெனற பின்னர் போலஸீார் அதிரடியாக உள்ளே புகுந்து கடத்தல் கும்பலை வளைத்துப்பிடித்தனர்.

பாலமுருகன் பத்திரமாக மீட்கப்பட்டார். கடத்தல் கும்பலைச் சேர்ந்த கிரிபாபு,ஹரிபாபு, யோகராஜ், முரளி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதில் கிரிபாபு என்பவர் வாசவி ஜூவல்லர்ஸ் என்ற நகைக் கடையைசெளகார்பேட்டையில் நடத்தி வருகிறான்.

பாலமுருகனை கடத்தியது குறித்து கிரிபாபு கொடுத்துளள வாக்குமூலத்தில்,சிங்கப்பூரிலிருந்து வரும் பயணிகள் மூலம் எனக்கு தங்க நகைகள் வருவது வழக்கம்.(முன்பெல்லாம் குருவிகள் என்ற பெயரில் இதற்காகவே சிலர் வெளிநாடுகளுக்குப்போய் நகை, எலெக்ட்ரானிக் பொருட்களை கொண்டு வருவது உண்டு) அதேபோலபாலமுருகனிடம் மொத்தம் 350 கிராம் எடையுள்ள தங்க நகைகளை 2பொட்டலங்களாக கட்டிக் கொடுத்து அனுப்பினர்.

சென்னை வந்ததும் 190 கிராம் எடையுள்ள பொட்டலத்தை மட்டும் கொடுத்தபாலமுருகன், 160 கிராம் பொட்டலத்தைக் கொடுககவில்லை.

இதுகுறித்து கேட்டபோது, இனனாரு பயணியிடம் அப்பொட்டலத்தைக் கொடுத்துவிட்டதாகத் தெரிவித்தார். அவர் யார் என்று கேட்டபோது உண்மையை சொல்லமறுத்தார். அதனால்தான் கடத்தினோம் என்று கிரிபாபு கூறியுள்ளார்.

2வது பொட்டலம் குறித்து போலீஸார் பாலமுருகனிடம் கேட்டேபாது, என்னிடம் ஒருபொட்டலம் மடடுமே கொடுத்தனர். அதை நான் கொடுத்து விட்டேன் என்றார். கைதுசெயயப்பட்ட நான்கு பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில்அடைக்கப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X