For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாஜ்பாய் கடிதம்-நாடாளுமன்றததில் பெரும் அமளி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியின் செயல்பாடுகளை மிகக் கடுமையாகவிமர்சித்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எழுதிய கடிதம் குறித்து இன்றுமக்களவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து லோக்சபா இன்று முழுவதும்ஒத்தி வைக்கப்பட்டது.

பாதக் கமிஷன் அறிக்கை விவரம் முன் கூட்டியே வெளியானது தொடர்பாக கடந்தசில நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக கூட்டணிக் கட்சிஎம்.பிக்கள் மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

பாஜக எம்.பிக்களின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்து முன்னாள் பிரதமர்வாஜ்பாய்க்கு சபாநாயகர் சோம்நிாத் சாட்டர்ஜி கடிதம் எழுதியிருந்தார். இதற்குவாஜ்பாய் அனுப்பிய பதில் கடிதத்தில், சாட்டர்ஜியின் செயல்பாடுகளை மிகக்கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந் நிலையில் இன்று காலை லோக்சபா கூடியதும், வாஜ்பாய் கடிதம் குறிததுகம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினர்.

வாஜ்பாயின் கடிதம் மிகவும் தவறானது என்று அவர்கள் கோஷமிட்டனர்.அவர்களுக்கு எதிராக பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம.பிக்களும்கோஷமிட்டனர். இதனால் சபையில் பெரும் அமளி நிலவியது.

இதனால் முற்பகல் 11.30 மணிக்கும், பின்னர் 2 மணி வரையிலும் சபையை சோம்நாத்ஒத்திவைத்தார். 2 மணிக்கு சபை மீண்டும் கூடியபோதும் பிரச்சினை ஓயவில்லை.பாஜக கூட்டணி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் எம்.பிக்கள் கடும் வாக்குவாதத்தில்ஈடுபட்டதால் சபையை நடத்தடி முயவில்லை.

இதையடுத்து இன்று நாள் முழுவதும் லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X