சட்டசபையில் அமளி: அதிமுக வெளிநடப்பு
சென்னை:
அதிமுக உறுப்பினர் தா.மலரவன் பேசும்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஉறுப்பினர் குறுக்கிட்டுப் பேசியதால் அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்துவெளிநடப்புச் செய்தனர்.
சட்டசபையில் இன்று உள்ளாட்சித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்கலந்து கொண்டு அதிமுக உறுப்பினர் மலரவன் பேசினார். சட்டசபையில்அவரதுமுதல்பேச்சு இது. மலரவன் பேசுகையில், திருப்பூரில் குடிநீர்த் திட்டத்தைமுந்தைய அதிமுக அரசுதான் அதிக நிதி ஒதுக்கி அமல்படுத்தியது என்றார்.அப்போது குறுக்கிட்ட திருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. கோவிந்தசாமி,1983ம் ஆண்டு எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில்தான் இத்திட்டத்திற்கு அடிக்கல்நாட்டப்பட்டது. ஆனால் 1989ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான அரசுதான்கூடுதல் நிதி ஒதுக்கி திட்டததை நடைமுறைக்கு கொண்டு வந்தது என்றார்.
கோவிந்தசாமியின் பேச்சுக்கு அதிமுக கொறடா செங்கோட்டையன் கடும்ஆட்சேபனை தெரிவிததார். மலவரன் முதல் முறையாக பேசுகிறார். அவரது பேச்சில்கோவிந்தசாமி குறுக்கிடுவது முறையா? எந்தவித முன் அனுமதியும் இல்லாமல் அவர்குறுக்கிட்டுப் பேசுவதை சபாநாயகர் அனுமதிப்பது கண்டனத்துக்குரியது என்றார்.இதையடுத்து அதிமுக உறுப்பினர்களுக்கும், திமுக மற்றும் கம்யூனிஸ்ட்உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதையடுத்து அதிமுகஉறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.
பின்னர் மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசுகையில், உள்ளாட்சித்துறைஅமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக மானியக் கோரிக்கை மீதானவிவாதத்திற்குப் பதில் அளித்துப் பேசுவதை கேட்க மனம் இல்லாமல் தான் அதிமுகஉறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர் என்றார்.
காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், பாமக தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் அதிமுகஉறுப்பினர்களின் வெளிநடப்பைக் கண்டித்துப் பேசினர்.பின்னர் கோவிந்தசாமி மீண்டும் பேசுகையில், அதிமுக உறுப்பினர்கள் என்னைஅவமானப்படுத்தும் வகையில் பேசியுள்ளனர் என்றார்.
இதுகுறித்து முறைப்படி புகாராக கொடுததால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனஅதற்கு சபாநாயகர் ஆவுடையப்பன் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications