கள்ளநோட்டு வழக்கு: ஜனனிக்கு முன் ஜாமீன் மறுப்பு!
Subscribe to Oneindia Tamil
மதுரை:
கள்ள நோட்டு வழக்கில் இளம் பெண் ஜனனியின் முன் ஜாமீன்மனுவை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.அவரது தாயார் ரமீஜா, கார் டிரைவர் சதீஷுக்கு முன்ஜாமீன்வழங்கப்பட்டது.
கள்ளநோட்டு வழக்கில் சிக்கியுள்ள ஜனனி, அவரது தாயார்ரமீஜா, கார் டிரைவர் சதீஷ், நெல்லை ஜமீன்தார் ஜெகதீஷ்ராஜாஆகியோர் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் மனு தாக்கல் செய்துள்ளனர்.இந்த மனு நீதிபதி ஜெயபால்முன்னிலையில் இன்றுவிசாரணைக்கு வந்தது. வாதத்தின் இறுதியில், ஜனனியின்முன்ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்வதாகஅறிவித்தார். ரமீஜா, சதீஷுக்கு முன்ஜாமீன் வழங்கிஉத்தரவிடடார்.
ஜெகதீஷ் ராஜா தாக்கல் செய்திருந்த மனுவை வாபஸ்பெறுவதாக அவரது வழக்கறிஞர் தெரிவித்ததால் அந்தமனுவையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதிஅறிவித்தார்.












Click it and Unblock the Notifications