காளிமுத்து மீது நடவடிக்கை: சபாநாயகர் தகவல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
எம்.எல்.ஏ. விடுதி வளாகததில் உள்ள உணவகங்களுக்கு காண்டிராக்ட் கொடுத்ததில், நடந்த ஊழல் தொடர்பாகமுன்னாள் சபாநாயகர் காளிமுத்து மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என சபாநாயகர்ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலை அருகே உள்ள அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள இரண்டு உணவகங்களுக்குகாண்டிராக்டை நீடிக்கும் விஷயத்தில், காளிமுத்து முறைகேடு செய்துள்ளதாக முதல்வர் கருணாநிதி சமீபத்தில்,சட்டசபையில் புகார் தெரிவித்தார். இதுதொடர்பான ஆதாரங்களையும் அவர் சபாநாயகரிடம் ஒப்படைத்தார்.இவற்றைப் பரிசீலித்துப் பார்த்த சபாநாயகர் ஆவுடையப்பன், காளிமுத்து முறைகேட்டில் ஈடுபட்டது ஆவணங்கள்மூலம் தெளிவாக தெரிகிறது. எனவே அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நேற்றுசட்டசபையில் அறிவித்தார்.
முன்னதாக முதல்வர் கொடுத்த ஆவணங்களை, சபாநாயகர் அறைக்குச் சென்று அதிமுக, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள் நீங்கலாக மற்ற கட்சிகளின் தலைவர்கள் ஆராய்ந்தனர்.
மேலும், காளிமுத்து காண்டிராக்ட் நீட்டிப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்ட ஆவணத்தின் நகல்பத்திரிக்கையாளர்களுக்கும் வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications