இலவச தரிசு நிலம் நிச்சயம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தடைகளைத் தாண்டி ஏழைகளுக்கு 2 ஏக்கர்தரிசு நிலத்தை வழங்கும் திட்டத்தை திமுகஅரசு நிறைவேற்றியே தீரும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சட்டசபையில் இன்று மார்க்சிஸ்ட் உறுப்பினர் கோவிந்தசாமி பேசுகையில்,ஏழைகளுக்கு 2 ஏக்கர் இலவச தரிசு நிலம் வழங்குவதை எதிர்க்கட்சியினர் விமர்சித்துவருவதாகவும், இத்திட்டம் எபபடி நிறைவேற்றப்படப் போகிறது என்பதை தெளிவாகவிவரிக்குமாறும் கோரினார்.

அதற்குப் பதிலளித்த கருணாநிதி, 3 வழிகளில் இத்திட்டத்தை நிறைவேற்றதிட்டமிட்டுள்ளோம். முதலில் அரசிடம் உள்ள தரிசு நிலங்கள் பிரிக்கப்பட்டு நிலமற்றஏழை விவசாயிகளுக்கு தலா 2 ஏக்கர் வீதம் வழங்கப்படும்.2வது, அரசு புறம் போக்கு நிலத்தை ஆக்கிரமித்து குடியேறியுள்ளவர்களிடமிருந்துஅந்த நிலம் பெறப்பட்டு பயிரிடத்தக்க வகையில் மாற்றப்பட்டு அவர்களிடமேதிருப்பித் தரப்படும்.

இறுதியாக, தனி நபர்கள் வைத்துள்ள பட்டா நிலங்கள், அதாவது பயிரிட முடியாதநிலையில் உள்ள பட்டாவுடன் கூடிய தரிசு நிலங்கள் மேம்படுத்தப்பட்டு அவர்களிடம்ஒப்படைக்கப்படும்.

இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் விவசாய உற்பத்தியை பெருக்க முடியும்.ஏழை விவசாயிகளின் பொருளாதாரம் உயரும். வேலையில்லாத் திண்டாட்டம்சற்றுகுறையும்.

அரசின் உயரிய எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல், தமிழகத்தில் 50 லட்சம் ஏக்கர்தரிசு நிலம் இருக்கிறதா, 60லட்சம் ஏக்கர் நிலம் இருக்கிறதா என்று கேட்பதுதேவையற்ற ஒன்றாகும். ஏழைகள் பயன் பெற நிலம் வழங்க வேண்டும் என்பதுஅரசின் எண்ணம்.

அதை நிறைவேற்றும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம். நிச்சயம் நிறை வேற்றியேதீருவோம். இந்தத் திட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாககூறிக்கொண்டிருக்கம் அதிமுகவினர், அதற்குப் பதிலாக எப்படி இத்திட்டத்தைசெயல்படுத்தலாம் என்று அரசுக்கு யோசனை தெரிவிக்கலாம்.

ஏழை மக்களுக்கு நிலம் வழங்கியே தீருவோம். யார்தடுத்தாலும அஞ்ச மாட்டோம்என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+