புலிகள் தாக்குதலில் ராணுவ கிட்டங்கி தகர்ப்பு; 40 வீரர்கள் பலி!
திரிகோணமலை:
திரிகோணமலை மாவட்டம் அல்லை பகுதியில் உள்ள இலங்கை ராணுவகிட்டங்கியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் காரணமாகத்தான் வெடிவிபத்துஏற்பட்டதாக தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் 40 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாக இலங்கை ராணுவம்தெரிவித்துள்ளது. மாவிலாறு அணையின் மதகுகளை விடுதலைப் புலிகள்திறந்துவிட்டு விட்ட போதிலும் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில்உள்ள திரிகோணமலை பகுதிகளை இலங்கை ராணுவம் தாக்கி வருகிறது.இந்த நிலையில், அல்லை என்ற இடத்தில் ராணுவத்தின் ஆயுதக் கிடங்கில் பெரும்வெடிவிபத்து ஏற்பட்டு பல ராணுவ வீரர்கள் பலியாயினர். விடுதலைப் புலிகள்பகுதியில் தொடர்ந்து பீரங்கிகளால் தாக்குதல் நடத்தியதால், பீரங்கிகள்வெப்பமடைந்து அதனால்தான் விபத்து ஏற்பட்டதாகமுதலில் ராணுவம் கூறியது.
ஆனால் தற்போது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் தான் ராணுவக்கிட்டங்கியில் வெடி விபத்து ஏற்பட்டதாக ராணுவம் ஒப்பு கொண்டுள்ளது. புலிகளின்அதிரடித்தாக்குதலில் அந்தக் கிட்டங்கி முழுமையாக சேதமடைந்து விட்டது. 40ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். புலிகளால் தாக்கப்பட்ட அந்த கிட்டங்கிதொடர்ந்து எரிந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், திரிகோணமலை எங்களது கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது.தொடர்ந்து இருக்கும் என்று விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தலைவர்பொட்டு அம்மன் தெரிவித்துள்ளார்.
ராணுவத்துடன் நடந்த மோதலில் உயிரிழந்த விடுதலைப் புலிகள் அமைப்பைச்சேர்ந்தகுஞ்சனின் நினைவு நாள் கூட்டத்தில் இவ்வாறு பொட்டு அம்மன் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications