நெடுமாறன் மாநாடு: கமிஷனருக்கு நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பழ.நெடுமாறன் தலைமையிலான உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டுக்குத் தடைவிதித்தது குறிதுத விளக்கம் அளிக்குமாறு சேலம் மாநகர காவல் துறை ஆணையருக்குசென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
உலகத் தமிழர் பேரவையின் மாநாட்டுக்கு சேலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வருகிற 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மாநாடு நடைபெறுவதாக இருந்தது. ஆனால்இந்த மாநாட்டுக்கு அனுமதி வழங்க சேலம் மாநகர காவல்துறை மறுத்து விட்டது.இதை எதிர்த்து பேரவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, நீதிபதி ரவிராஜபாண்டியன் முன்னிலையில்விசாரணைக்கு வந்தது. இந்தமனு குரித்து விலக்கம் அளிக்குமாறு கூறி சேலம் மாநகரகாவல்துறை ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மனு இன்றுமீண்டும் விசாரணைக்கு வருகிறது.












Click it and Unblock the Notifications