மாமூல் சண்டை: 56 போலீஸார் கூண்டோடு மாற்றம்
சென்னை:
சென்னை ஆதம்பாக்கத்தில் லஞ்சப் பணத்தை பங்கிடுவது தொடர்பாக 3 போலீஸார்தெருவில் நின்று சண்டை போட்டதன் எதிரொலியாக அந்தக் காவல் நிலையத்தில்பணியாற்றி வந்த 5 சப் இனஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 56 போலீஸாரும் அதிரடியாகமாற்றம் செய்யப்பட்டனர்.
ஆதம்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த 3 காவலர்கள், சில நாட்களுக்கு முன்பு,தெருவில் நின்று கடுமையாக சண்டை போட்டனர். ஒருவரிடமிருந்து பெற்ற பணத்தைபங்கிடுவது தொடர்பாக இந்த சண்டை நடந்தது.பொதுமக்கள் கூடி நின்று வேடிக்கை பார்க்க போலஸீார் போட்ட இந்த சண்டையால்சென்னை காவல் துறையின் பெயரே நாறிப் போனது. இந்தக் காவல் நிலையத்தில்அடிக்கடி இப்படி மாமூல் சண்டை, லஞ்சப் பணத்தை பங்கிடுவதில் தகராறு நடக்கும்என அப்பகுதி பொதுமக்கள் கூறினர்.
இந்த மோதல் தொடர்பாக விசாரணை நடத்த வந்த உயர் அதிகாரிகளிடம் இதைபொதுமக்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில்பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் இளங்கோவைத் தவிர மற்ற 56 போலீஸாரும்கூண்டோடு ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேர் சப்இன்ஸ்பெக்டர்கள் ஆவர்.
இன்ஸ்பெக்டர் மட்டுமே இருப்பதால் காவல் நிலையம் வெறிச்சோடிக்காணப்படுகிறது. புதிய காவலர்கள் யாரும் இதுவரை நியமிக்கப்படவில்லை.அதுவரை பரங்கிமலை காவல் மாவட்டத்தின் கீழ் வரும் 15 காவல்நிலையங்களிலிருந்து தலா ஒரு காவலர் இங்கு வந்து பணியாற்ற வேண்டும் எனஉத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதம்பாககத்தில் பணத்தைப் பங்கிடுவதற்கு அடித்துக் கொண்ட காவலர்கள் உள்படமொத்தமாக அத்தனை பேரும் இடமாற்றம் செய்யப்பட்டதால் அப்பகுதி மக்கள்பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications