பெண் கற்பழிப்பு: 6 போலீஸாருக்கு ஆயுள் தண்டனை!
விழுப்புரம்:
விசாரணைக்காக அழைத்துச்சென்ற இளம் பெண்ணை நடு வழியில் ஓடும் வேனில்கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்ட புதுவையைச் சேர்ந்த 6 போலீஸாருக்குஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அத்தியூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயாஎன்ற பெண்ணை கடந்த 1993ம் ஆண்டு புதுவை போலீஸார் திருட்டு வழக்கில் கைதுசெய்தனர்.விசாரணைக்காக போலீஸ் வேனில் அவர்கள் புதுவைக்கு அழைத்துச் சென்றனர்.அப்போது நடு வழியில் ஓடும் வேனிலேயே அதில் இருந்த 6 போலீஸாரும்விஜயாவை கற்பழித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக விஜயா கொடுத்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர்கிருஷ்ணராஜா, சப் இன்ஸ்பெக்டர் சசிக்குமார், காவலர்கள் ராஜாராம், முனுசாமி,சுப்பராமன், பத்மநாபன் ஆகிய 6 போலீஸார் மீது விழுப்புரம் முதலாவதுசெஷன்ஸ்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் வழக்கப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. பெண்ணை கற்பழித்தகுற்றத்திற்காக 6 போலீஸாருக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும்கடத்தல் குற்றத்திற்காக தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில்தெரிவித்திருந்தார். மேலும் 6 பேருக்கும் தலா ரூ.31,000 அபராதம் விதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications