குருவாயூரில் மதமாற்றம் நடப்பதாக சர்ச்சை!
குருவாயூர்:
கேரள மாநிலம் குருவாயூரில் உள்ள பிரபல கிருஷ்ணர்கோவிலில் மதமாற்றமுயற்சிகள் நடப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
திருப்பதி கோவிலில்மதமாற்ற முயற்சிகள் படு தீவிரமாக இருப்பதாக ஏற்கனவேபுகார் கிளம்பி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குருவாயூர்கோவிலில் மதமாற்ற முயற்சிகள் நடப்பதாக புகார் எழுந்துள்ளது.கிருஷ்ணர் கோவிலுக்குச் சொந்தமான மேல்பத்தூர் ஆடிட்டோரியம் என்றஆதரவற்றோர் தங்கும் விடுதி உள்ளது. இந்த விடுதிக்கு ஜேக்கப் என்பவர்தலைமையிலான இம்மானுவேல் ஜீவகாருண்ய சமிதி என்ற அமைப்பைச்சேர்ந்தவர்கள் ஆம்புலன்ஸ் ஒன்றில் வந்துள்ளனர்.
ஆடிட்டோரியத்தில் தங்கியுள்ள 16 பேரை வலுக்கட்டாயமாக தங்களதுஆம்புலன்ஸில் ஏற்றி தங்களது இடத்திற்குக் கொண்டு செல்ல முயன்றுள்ளனர்.ஆனால் 16 பேரும் வேனில் ஏற மறுத்து காலில் விழுந்து கதறி அழுதுள்ளனர்.ஆனாலும் விடாத அந்த கிறிஸ்தவ அமைப்பினர் அவர்களை வலுக்கட்டாயமாகஏற்றிச் செல்ல முயன்றுள்ளனர்.
தகவல் அறிநத்தம் போலீஸார் விரைந்து வந்தனர். 16 பேரையும் அழைத்துவிசாரித்துள்ளனர். போலீஸார் வருவதை அறிந்துதம் கிறிஸ்தவஅமைப்பினர்அங்கிருந்து சென்று விட்டனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று அவர்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றும்முயற்சியே இது என்று பாஜக மற்றும் இந்து ஆதரவுஅமைப்புகள் புகார் கூறியுள்ளன.