ராணுவ வீரர்களுக்கு எய்ட்ஸை பரப்ப ஐஎஸ்ஐ திட்டம்!
Subscribe to Oneindia Tamil
சிலிகுரி:
இந்திய ராணுவ வீரர்களுக்கு எச்ஐவி வைரஸை பரப்ப பாகிஸ்தான் உளவுத்துறையான ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவை சீர்குலைக்க தீவிரவாதிகளுக்கு பெரும் ஊக்க சக்தியாக இருந்து பல சதித்திட்டங்களை நிறை வேற்றி வரும் பாகிஸ்தானின் உளவுத்துறை இப்போது புதியதிட்டம் ஒன்றைத் தீட்டியுள்ளதாக இந்திய உளவுத்துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.அதன்படி, இந்திய ராணுவ வீரர்கள், பாரா மிலிட்டரி படையினருக்கும் எச்ஐவிவைரஸை பரப்பி விட ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளது. தீவிரவாத இயக்கங்களின்துணையோடு இதை மேற்கொள்ள ஐஎஸ்ஐ முயன்று வருகிறது.எனவே ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படையினர் உள்ளிட்ட பாதுகாப்புப்படையினர் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பில்லாதஉடலுறவை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் எனவும் அவர்களுக்கு எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.மேலும், நேபாளம், பூடான் எல்லைப் பகுதியை பாதுகாக்கும் படையினருக்கானமருத்துவமனையில், உள்ள சிரிஞ்சுகள், ஊசிகள் உள்ளிட்டவை கடுமையானசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பயன்படுத்தப்படுகின்றன.











Click it and Unblock the Notifications