அல் உம்மா கைதிகள்- ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் கடும் மோதல்!
கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் அல் உம்மா கைதிகளுக்கும், தலித் தலைவர் ஜான்பாண்டியன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. இதில் 2வார்டன்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடலூர் மத்திய சிறையில் அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த பலர்அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல, கொலை வழக்கில் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்ட தலித் தலைவர் ஜான் பாண்டியனும் இங்கு தான்அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சிறைக்குள் வழிபாடு செய்வது தொடர்பாக அல் உம்மா கைதிகளுக்கும், ஜான்பாண்டியனின் ஆதரவாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாககூறப்படுகிறது. அல் உம்மா கைதியினர் பிரார்த்தனை செய்வது குறித்து ஜான்பாண்டியன் ஆதரவாளர்கள் கிண்டலடித்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது.இருதரப்பினரும் கடுமையாக சண்டையிட்டனர். சனிக்கிழமை இரவு இந்த சண்டைநடந்துள்ளது.
சண்டையை விலக்கப் போன 2 வார்டன்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.சமீபத்தில் தான் ஜான் பாண்டியனும், அவரது ஆதரவாளர்களும், சில கைதிகளுடன்கடுமையாக மோதினர். இதைத் தொடர்ந்து தான் ஜான் பாண்டியன் திருச்சிக்குமாற்றப்பட்டார்.
இந்த நிலையில் இப்போது ஜான் பாண்டியனின் ஆதரவாளர்கள், அல் உம்மாகைதிகளுடன் மோதியுள்ளனர். இந்த மோதலைத் தொடர்ந்து அல் உம்மா கைதிஅப்பாஸ், ஜான் பாண்டியனின் ஆதரவாளர்களான பழனி, முனியாண்டி, ரவி,முத்துக்கிருஷ்ணன் ஆகியோரை வேறு சிறைகளுக்கு மாற்ற சிறைக் கண்காணிப்பாளர்நாராயணமூர்த்தி சிறைத்துறை ஐஜிக்கு பரிந்துரைத்துள்ளார்.
-
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று தொடக்கம்! தமிழகத்தில் எப்போது? -
இந்தி மாநிலங்களுக்கு போகும் "ரியல்" பவர்? 816ஆக உயரும் தொகுதிகள்.. மறுசீரமைப்பில் என்ன நடக்கும் -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக!












Click it and Unblock the Notifications