அல் உம்மா கைதிகள்- ஜான் பாண்டியன் ஆதரவாளர்கள் கடும் மோதல்!
கடலூர்:
கடலூர் மத்திய சிறையில் அல் உம்மா கைதிகளுக்கும், தலித் தலைவர் ஜான்பாண்டியன் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் நடந்தது. இதில் 2வார்டன்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
கடலூர் மத்திய சிறையில் அல் உம்மா அமைப்பைச் சேர்ந்த பலர்அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல, கொலை வழக்கில் ஆயுள் தண்டனைவிதிக்கப்பட்ட தலித் தலைவர் ஜான் பாண்டியனும் இங்கு தான்அடைக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.சிறைக்குள் வழிபாடு செய்வது தொடர்பாக அல் உம்மா கைதிகளுக்கும், ஜான்பாண்டியனின் ஆதரவாளர்களுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டதாககூறப்படுகிறது. அல் உம்மா கைதியினர் பிரார்த்தனை செய்வது குறித்து ஜான்பாண்டியன் ஆதரவாளர்கள் கிண்டலடித்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது.இருதரப்பினரும் கடுமையாக சண்டையிட்டனர். சனிக்கிழமை இரவு இந்த சண்டைநடந்துள்ளது.
சண்டையை விலக்கப் போன 2 வார்டன்கள் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர்.சமீபத்தில் தான் ஜான் பாண்டியனும், அவரது ஆதரவாளர்களும், சில கைதிகளுடன்கடுமையாக மோதினர். இதைத் தொடர்ந்து தான் ஜான் பாண்டியன் திருச்சிக்குமாற்றப்பட்டார்.
இந்த நிலையில் இப்போது ஜான் பாண்டியனின் ஆதரவாளர்கள், அல் உம்மாகைதிகளுடன் மோதியுள்ளனர். இந்த மோதலைத் தொடர்ந்து அல் உம்மா கைதிஅப்பாஸ், ஜான் பாண்டியனின் ஆதரவாளர்களான பழனி, முனியாண்டி, ரவி,முத்துக்கிருஷ்ணன் ஆகியோரை வேறு சிறைகளுக்கு மாற்ற சிறைக் கண்காணிப்பாளர்நாராயணமூர்த்தி சிறைத்துறை ஐஜிக்கு பரிந்துரைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications