திருடப் போய் தீயில் கருகி இறந்த வாலிபர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஒரு வீட்டில் திருடப் போனவர் மொட்டை மாடியில் போடப்பட்டிருந்தஷாமியானாவில் ஏற்பட்ட தீயில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.

சென்னை மதுரவாயல் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். இவர் விசேஷங்களுக்குஷாமியானா பந்தல் பாடும் காண்டிராக்டர்.

பூந்தமல்லியை அடுத்த குமணன் சாவடி பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார்ஆனந்தன். அந்த வீட்டின் மொட்டை மாடியில் ஷாமியான துணிகளையும், அதற்குரியகட்டைகளையும் போட்டு வைத்துள்ளார்.

2 நாட்களுக்கு முன்பு ஷாமியானா துணிகளில் தீப்பிடித்துக் கொண்டது. தீயணைப்புப்படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து விட்டுச்சென்றனர். பூந்தமல்லிபோலீஸார் இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில், தீயில் கருகிய துணிகளை அகற்றும் பணியில் ஆனந்தன்ஈடுபட்டிருந்தார். அப்போது கருகிய துணிகளுக்கு இடையே, ஒரு வாலிபரின் கருகிப்போன உடல் கிடந்தது. இதையடுத்து போலீஸாருக்கு ஆனந்தன் தகவல் கொடுத்தார்.

போலீஸார் விரைந்து வந்து அந்த பிணத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்குஅனுப்பினர். போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்த வாலிபர் பெயர்நீலகண்டன் என்றும், வளசரவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது.

நீலகண்டன் மீது 2 காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.எனவே ஆனந்தன் வீட்டில் திருடச் சென்ற போது தீ விபத்தில் சிக்கி அவர்இறந்திருக்கக்கூடும் என போலீஸார் கருதுகிறார்கள்.

ஆனால் தீ விபத்து நடந்த இடத்திலேயே சில காலி மது பாட்டில்களும் கிடந்தன.எனவே நீலகண்டனுடன் மேலும் சிலர் வந்திருக்கலாம், மது குடிதது விட்டுஅவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருக்கலாம், அதில் நீலகண்டன் கொலைசெய்யப்படடிருக்கலாம், அந்தக் கும்பலே தீயையும் வைத்து விட்டுச் சென்றிருக்கலாம்என்றும் போலீஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

அந்தக் கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+