விதவையை கொன்று 77ம் தற்கொலை!
Subscribe to Oneindia Tamil
தர்மபுரி:
45 வயது கள்ளக் காதலியை கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டார் 77 வயது முதியவர்.
தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகே உள்ள பெரிய முக்குலத்தை சேர்ந்த பொன்னுசாமி (77) மாட்டுத்தரகராக இருந்து வந்தார். இவரது மனைவி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார்.இந் நிலையில் பொன்னுசாமிக்கு, பென்னாகரம் இந்திரா நகர் காலனியை சேர்ந்த லட்சுமி (45) என்ற விதவைபெண்ணுக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. லட்சுமிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
வயதை மீறிய இந்த கள்ளக் காதலை பொன்னுசாமியின் உறவினர்கள் கண்டித்துள்ளனர். ஆனால் அவர் அதைகண்டு கொள்ளவில்லை. லட்சுமியுடன் உல்லாசமாக இருந்து வந்தார். இந் நிலையில் நேற்று முன்தினம் இரவுபொன்னுசாமியும், லட்சுமியும் நாகனம்பட்சி என்ற இடத்தில் ஒரு வீட்டில் தங்கினர்.
காலையில் பொன்னுசாமி வீட்டுக்கு வெளியே பிணமாக கிடந்தார். வீட்டுக்குள் லட்சுமி கத்திக் குத்துகாயங்களுடன் இறந்து கிடந்தார்.
லட்சுமியை கொன்றுவிட்டு பொன்னுசாமி விஷம் அருந்தி இறந்தாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications