ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் உதிரி பாகன நிறுவனம்: தயாநிதி மாறன் தகவல்
சென்னை:
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் பிளஸ்க்ட்ரானிக்ஸ் நிறுவனம் ரூ. 450 கோடிமுதலீட்டில் செல்போன் தனது உதிரி பாகங்கள் தயாரிக்கும் பிரிவை இன்னும் 2மாதங்களில் தொடங்கும் என மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான பிளக்ஸ்ட்ரானிக்ஸ், சென்னைஅருகே ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் உதிரி பாகங்களை தயாரிக்கும் பிரிவை நிறுவமுன்வந்தது.இதுதொடர்பாக இந் நிறுவனத்தின் ஆசிய பிரிவு தலைவரும், நிர்வாக இயக்குநருமானபீட்டர் டேன் மற்றும் இந்திய சேவைப் பிரிவுக்கான இயக்குநர் குருராஜ் ஆகியோர்அமைச்சர்தயாநிதி மாறனை இன்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துஇத்திட்டம் குறித்து விவாதித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் தயாநிதி மாறன் பேசுகையில், ரூ. 450 கோடி முதலீட்டில்இத்திட்டம் தொடங்கப்படுகிறது. முதலில் 2000 பேருக்கு வேலைவாய்ப்புகிடைககும். படிப்படியாக இது 5000 ஆக அதிகரிக்கும.செல் போன் சாதனங்கள், செட் டாப் பாக்ஸ், தொலைத்தொடர்பு உதிரி பாகங்கள்இங்கு தயாரிக்கப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் மேலும் பல மின்னணு உதிரி பாக தயாரிப்பு நிறுவனங்கள்தமிழகத்தில் முதலீடுகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.ஸ்ரீபெரும்புதூர் நிறுவன தொடக்க விழாவுக்கு பிரதமர் மன்மோகன்சிங்,தமிழகமுதல்வர் கருணாநிதி ஆகியோர் அழைக்கப்படுவர் என்றார்தயாநிதி மாறன்.