தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டர் தீக்குளித்து தற்கொலை

Subscribe to Oneindia Tamil

ஊட்டி:

தபால் நிலைய சேமிப்புக் கணக்கில் ரூ. 50 லட்சம் முறைகேடு செய்தது தெரியவந்ததால் அவமானமடைந்த போஸ்ட் மாஸ்டர், தபால் நிலையத்திற்குள்ளேயேதீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

நீலகிரி மாவட்டம் குந்தா பகுதியில் உள்ள தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராகஇருந்தவர் சிவக்குமார். இவர் பொதுமக்களின் சேமிப்புக் கணக்கிலிருந்து பணத்தைஎடுத்து ரூ. 50 லட்சம அளவுக்கு மோசடி செய்துவிட்டதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதனால் பயந்து போனபோஸ்ட் மாஸ்டர் சிவக்குமார், அவமானமடைந்தார்.

இதைத் தொடர்ந்து தபால் அலுவலகத்திற்குள் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார். தீக்குளிப்பதற்கு முன் சேமிப்புக் கணக்கு புத்தகங்கள் அனைத்தையும்அவர் தீ வைத்து எரித்து விட்டார்.

சிவக்குமாரின் இந்த செயலால் குந்தா பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிர்ச்சிஅடைந்துள்ளனர். போட்ட பணம் என்னாகுமோ என்ற அச்சத்தில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+