ரிமோட் கண்ட்ரோல் பரபரப்பு-ரயில்கள் நிறுத்தம்
திண்டிவனம்:
திண்டிவனம் ரயில் நிலையத்தில் ரிமோட் கண்ட்ரோல் கருவிகண்டுபிடிக்கப்பட்டதால், அது வெடிகுண்டுகளை இயக்கும் ரிமோட்டாக இருக்கலாம்என்ற சந்தேகத்தில் ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, ரயில் நிலையம் முழுவதும்தீவிர சோதனை நடத்தப்பட்டது.
திண்டிவனம் ரயில் நிலையத்தில் புதிய சுரங்கப் பாதை கட்டப்பட்டு வருகிறது.இதற்கான பணி நடந்து கொண்டிருந்தபோது அப்பணியில் ஈடுபடடிருந்த ஒருஊழியர் அட்டைப் பெட்டி ஒன்று கிடப்பதைப் பார்த்து அது வெடிகுண்டாகஇருக்கலாம் என பீதியடைந்தார்.உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் வெளியேறினர். போலீஸார்வரவழைக்கப்பட்டனர். வெடிகுண்டு நிபுணர்களும் விரைந்து வந்தனர். பலத்தபாதுகாப்புடன், அந்தப் பெட்டி திறந்து பார்க்கப்பட்டது. ஆனால் அதில் குண்டுஎதுவும் இல்லை. ஆனால், ரிமோட் கண்ட்ரோல் கருவி இருந்தது.
இதனால் அங்கு பீதி ஏற்பட்டது. வெடிகுண்டுகளை இயக்கும் ரிமோட் போலதென்பட்டதால் திண்டிவனம் ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும், அந்த வழியாகசெல்லும் அனைத்து ரயில்களையும் நிறுத்த உத்தரவிடப்பட்டது.
ஆனால் அந்த கருவியை வெடிகுண்டு நிபுணர்கள் சோதித்தபோது அது அது டிவிடிபிளேயரை இயக்க உதவதும் ரிமோட் என்பது தெரிய வந்தது.
டிவிடி பிளேயருக்குள் குண்டு வைத்து இயக்க சதி போடப்பட்டிருக்கலாம் எனஅஞ்சப்பட்டதால் திண்டிவனம் ரயில் நிலையம் முழுவதும் தீவிரமாக சோதனைபோடப்பட்டது.
ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த பீதி காரணமாக சென்னையிலிருந்து வந்தகன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், சென்னை-திருவண்ணாமலை பாஸ்ட் பாசஞ்சர் ஆகியஇரு ரயில்களும் நிறுத்தப்படடு சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாக புறபபட்டுச்சென்றன.












Click it and Unblock the Notifications