அரசு ஆஸ்பத்திரியின் சுவர் கூட லஞ்சம் கேட்குது:சட்டசபையில் விஜயகாந்த் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அரசு மருத்துவமனை சுவரைத் தொட்டால்கூட லஞ்சம் கேட்கும் அளவுக்கு லஞ்ச,ஊழல் தலைவிரித்தாடுகிகறது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆதங்கம்தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் அவர் பேசுகையில், ஏழைகள் நோயால் பாதிக்கபபடும் நிலையில்அவர்களுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

அவர்கள் அரசு மருத்துவமனைகளையே நம்பியுள்ளனர். ஆனால்அரசுமருத்துவனைகள் நல்ல சுகாதாரத்துடன் இல்லை. அடிப்படை வசதிகள் கிடையாது.பிரசவ வார்டுகளில் படுக்கைகள் போதியதாக இல்லை.

எனது தொகுதியான விருத்தாச்சலத்தில் 2003ம் ஆண்டு நிறுவப்பட்ட எக்ஸ்ரே கருவிவேலை செய்யாமல் அப்படியே கிடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் லஞ்சம்தலைவிரித்தாடுகிறது. சுவரைத் தொட்டால்கூட லஞ்சம் கேட்கும் அளவுக்கு நிலைமைமோசமாக உள்ளது.

தரமான கொசு மருந்து அடிக்கப்படாததால்தான் சிக்குன்குனியா போன்ற நோய்களைத்தடுக்க முடியவில்லை. மலேரியா போன்ற காய்ச்சலையும் ஒழிக்க முடியவில்லை.எனவே தரமான கொசு மருந்து அடிக்க வேண்டும்.

இயற்கை வளங்கள் அப்படியே இருக்க, மக்கள் தொகை மட்டும் பெருகிக் கொண்டேபோகிறது. ஆனால் அதில் பெண்கள் தொகை குறைவாக உள்ளது. இதற்கு காரணம்பெண் சிசுக் கொலை தான் இதைத் தடுக்க அரசு என்ன செய்யப் போகிறது?.

கர்ப்பிணிப் பெண்களுக்கு தமிழக அரசு வழங்கும் நிதி உதவியை வரவேற்கிறேன்.அதுபோல், கருவுற்ற நாள் முதல் மூன்று ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 500 நிதி உதவிவழங்கப்பட வேண்டும்.

உயிர் காக்கும் மருந்துகள் விலையை குறைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

இலங்கையில் அந்நாட்டு ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலை கண்டித்துநிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வரவேற்கிறேன். இலங்கையிலிருந்து வரும்அகதிகளுக்கு சிறப்பான மருத்துவ வசதிகளையும் வழங்க வேண்டும்.

இலங்கையில் அந்நாட்டு ராணுவம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை தேமுதிககண்டிக்கிறது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+